மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வந்தால் பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ. 5,000 உதவித்தொகை வழங்கப்படும் என பாஜக அறிவித்துள்ளது.
மேற்கு வங்க பாஜக தலைவர் சாமிக் பட்டாச்சார்யா இன்று செய்தியாளர்களுடன் பேசுகையில், “பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ. 5,000 உதவித்தொகை வழங்கப்படும். பத்திரிகையாளர்களில் எந்தப் பிரிவினையும் இல்லாமல் குறிப்பிட்ட தகுதி மற்றும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் அனைவருக்கும் இந்தத் திட்டம் பொருந்தும்” என அவர் கூறினார்.
மேலும், ”நமக்காக எழுதுபவர்களாக இருந்தாலும் சரி. நமக்கு எதிராக எழுதுபவர்களாக இருந்தாலும் சரி. பத்திரிகையாளர்கள் அனைவரும் நமது நண்பர்களே. உங்களுடைய சுதந்திரத்தையும் உரிமைகளையும் நாங்கள் மதிக்கிறோம்.
இதன்மூலம் வழங்கப்படும் தொகை மிக அதிகமாக இல்லாவிட்டாலும் ஊடகத் துறையினருக்கு நிதி ஆதரவும் பாதுகாப்பு உணர்வும் வழங்கும் நோக்கில் இதைக் கொண்டுவரவுள்ளோம்.
இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நடைமுறை விவரங்கள் வகுக்கப்பட்டு பின்னர் பகிரப்படும்” என்று அவர் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 4 அன்று வெளியாகிறது.
Summary
Rs 5,000 for journalists: BJP promises monthly allowance in West Bengal
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மேற்கு வங்கத்தில் குடியிருப்பு பகுதியில் குண்டுவெடிப்பு: என்ஐஏ விசாரணை

மேற்கு வங்கத்தில் மம்தா மருமகனின் கட்சி அலுவலகம் இடிப்பு
மேற்கு வங்கத்தில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதியது! 3 குழந்தைகள் பலி!

மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!
விடியோக்கள்

2 கோடி கேட்டு நோட்டீஸ்,அதிர்ச்சி அடைந்த பெண் தொழிலாளி | GST NOTICE | Tirupathur | Woman daily-wager


