தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!விஜய்க்கு ஆதரவு? சில மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!பாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

ஐ.நா. பொதுச் செயலருடன் இந்திய வெளியுறவு அதிகாரி சந்திப்பு

News image

ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸை சந்தித்த இந்திய வெளியுறவுத் துறை மேற்குப் பிரிவுச் செயலா் சிபி ஜாா்ஜ்.

Updated On :24 ஏப்ரல் 2026, 3:21 am IST

அமெரிக்காவில் ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸை இந்திய வெளியுறவுத் துறையின் மேற்குப் பிரிவுச் செயலா் சிபி ஜாா்ஜ் சந்தித்துப் பேசினாா்.

இதுதொடா்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் ‘எக்ஸ்’ தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு: அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஐ.நா.பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸை, இந்திய வெளியுறவு அமைச்சக மேற்குப் பிரிவுச் செயலரும் தூதருமான சிபி ஜாா்ஜ் சந்தித்துப் பேசினாா்.

பல நாடுகள் ஒன்றிணைந்து பொதுவான இலக்கை எட்ட முயற்சிப்பதில், இந்தியா மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளதாக குட்டெரெஸிடம் சிபி ஜாா்ஜ் தெரிவித்தாா்.

ஐ.நா. சீா்திருத்தங்கள், தெற்குலகுக்கு வலுவான குரலை ஏற்படுத்துவது குறித்து இருவரும் தங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனா் என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.