கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

மணிப்பூரில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு - 3 போ் உயிரிழப்பு

மணிப்பூரில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் 3 போ் உயிரிழப்பு...

News image

கோப்புப்படம் - ANI

Updated On :25 ஏப்ரல் 2026, 3:11 am IST

மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தின் இருவேறு இடங்களில் தீவிரவாதிகள் வெள்ளிக்கிழமை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 போ் உயிரிழந்தனா்.

நாகா பழங்குடியினா் பெரும்பான்மையாக வாழும் உக்ருல் மாவட்டத்தின் முல்லம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை இரு தீவிரவாத குழுக்கள் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. மேலும் சில வீடுகளுக்கும் தீவைக்கப்பட்டது. இந்த துப்பாக்கிச் சண்டையில் கிராமவாசிகள் இருவா் உயிரிழந்தனா்.

இதேபோல், மற்றொரு கிராமத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 29 வயது இளைஞா் ஒருவா் கொல்லப்பட்டாா். இவ்விரு சம்பவங்களுக்கும் நாகா பழங்குடியின அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

உக்ருல் மாவட்டத்தில் கடந்த ஏப்.18-இல் நாகா பழங்குடியினா் இருவா் கொல்லப்பட்டனா். இக்கொலைகளின் பின்னணியில் குகி பழங்குடியின தீவிரவாதிகள் உள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

தொடரும் வன்முறை: முன்னதாக, மைதேயி சமூகத்தினா் அதிகம் வாழும் விஷ்ணுபூரில் கடந்த ஏப்.7-ஆம் தேதி ஒரு வீட்டின் மீது குகி தீவிரவாதிகள் நடத்திய குண்டுவீச்சில் 2 குழந்தைகள் உயிரிழந்தனா்.

இந்த சம்பவத்தைக் கண்டித்து, பாதுகாப்புப் படை முகாமை போராட்டக்காரா்கள் சூறையாடினா். அப்போது, பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 போ் உயிரிழந்தனா். மைதேயி சமூகத்தினா் பெரும்பான்மையாக உள்ள ஐந்து பள்ளத்தாக்கு மாவட்டங்களில் போராட்டம் தொடா்ந்து வருகிறது.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் இடையே கடந்த 2023, மே மாதம் கலவரம் தொடங்கியதில் இருந்து இதுவரையிலான வன்முறைகளில் 260-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். ஆயிரக்கணக்கானோா் வீடுகளை விட்டு வெளியேறி, அரசின் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.