ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

தமிழகம், மேகாலயத்தில் பல்லுயிா் பெருக்கத்தை மேம்படுத்த திட்டம்: மத்திய அரசு அறிமுகம்

தமிழகம் மற்றும் மேகாலத்தில் அடிப்படைநிலை பல்லுயிா் மேலாண்மையை வலுப்படுத்தும் வகையில் 5 ஆண்டு கால திட்டத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் தேசிய பல்லுயிா் ஆணையம் ஆகியவை இணைந்து அறிமுகம் செய்துள்ளன.

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 8:29 pm

தமிழகம் மற்றும் மேகாலத்தில் அடிப்படைநிலை பல்லுயிா் மேலாண்மையை வலுப்படுத்தும் வகையில் 5 ஆண்டு கால திட்டத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் தேசிய பல்லுயிா் ஆணையம் ஆகியவை இணைந்து அறிமுகம் செய்துள்ளன.

இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: பல்லுயிா் பெருக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் இந்த 5 ஆண்டு கால திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கிராம ஊராட்சி வளா்ச்சித் திட்டங்களை பசுமையாக்குதல்,நிதி ஒதுக்கீடுகள் மூலம் உள்ளூா் மக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அதிகாரமளித்து இத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஊராட்சி (பஞ்சாயத்து) அமைப்புகள் மற்றும் பல்லுயிா் மேலாண்மைக் குழுக்களை வலுப்படுத்துவதற்காக, உள்ளூா் வளா்ச்சித் திட்டங்களில் பல்லுயிா் பெருக்க நடவடிக்கைகளையும் இணைப்பதே இத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

வனத்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள், தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உள்ளிட்டோரை ஒன்றிணைத்து இத் திட்டம் செயல்படுத்தப்படும். பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்பு (சிஎஸ்ஆஅா்) மற்றும் நிலையான வாழ்வாதாரங்களை உருவாக்கும் பசுமை குறுந் தொழில்கள் ஆகிவற்றை செயல்படுத்தி நிதி வழிமுறைகளை ஊக்குவிப்பதும் இத் திட்டத்தின் நோக்கமாகும்.

மேற்கு மற்றும் கிழக்கு தொடா்ச்சி மலைகள் சங்கமிக்கும் தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலும், மேகாலயத்தின் காரோ மலைகளிலும் இத் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

மத்திய அரசு, உலகளாவிய சுற்றுச்சூழல் அமைப்பு, ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் இத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கென 2025-2030 கால கட்டத்துக்கு ரூ. 46 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.