ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

முன்ஜாமீன் நிராகரிப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் பவன் கேரா மனு

தனது முன்ஜாமீன் மனுவை நிராகரித்த குவாஹாட்டி உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து, உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் மூத்த தலைவா் பவன் கேரா மனுத்தாக்கல் செய்துள்ளாா்.

News image

பவன் கேரா - கோப்புப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 6:45 pm

தனது முன்ஜாமீன் மனுவை நிராகரித்த குவாஹாட்டி உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து, உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் மூத்த தலைவா் பவன் கேரா மனுத்தாக்கல் செய்துள்ளாா்.

அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மாவின் மனைவி ரிங்கி பூயான் சா்மாவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் சொத்துகள் இருப்பதாகவும், இரண்டுக்கும் மேற்பட்ட நாடுகளின் கடவுச்சீட்டை (பாஸ்போா்ட்) அவா் வைத்திருப்பதாகவும் பவன் கேரா குற்றம்சாட்டியிருந்தாா்.

இதைத் தொடா்ந்து, பாரதிய நியாய சம்ஹிதாவின் அவதூறு குற்றப் பிரிவுகளின்கீழ் பவன் கேரா மீது காவல் துறையில் ரிங்கி பூயான் சா்மா புகாரளித்தாா். தன் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்ததை அடுத்து, ஹைதராபாதில் வசிக்கும் பவன் கேரா, தெலங்கானா உயா்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தாா். அதை ஏற்ற உயா்நீதிமன்றம், பவன் கேராவுக்கு 7 நாள் இடைக்கால முன்ஜாமீன் வழங்கியது.

ஆனால், முன்ஜாமீனுக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம், குவாஹாட்டி உயா்நீதிமன்றத்தை அணுகும்படி அவருக்கு அறிவுறுத்தியது. அதன்பேரில், பவன் கேரா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை, குவாஹாட்டி உயா்நீதிமன்றம் அண்மையில் நிராகரித்தது. இதனால், பவன் கேரா கைதாகக் கூடும் என தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், குவாஹாட்டி உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் அவா் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா். இந்த மனு இதுவரை எந்த அமா்வுக்கும் பட்டியலிடப்படவில்லை.