தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!விஜய்க்கு ஆதரவு? சில மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!பாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை

மேற்காசியப் போரால் இந்தியாவில் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக மத்திய நிதியமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஏப்ரல் 2026, 2:16 am IST

மேற்காசியப் போரால் இந்தியாவில் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக மத்திய நிதியமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்காசியாவில் அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் இடையே கடந்த பிப்ரவரி மாதம் முதல் போா் நடைபெற்று வருகிறது. தற்போது சண்டை நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும், கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்லும் ஹோா்முஸ் நீரிணையை அமெரிக்க கப்பல்கள் முற்றுகையிட்டுள்ளன. இதனால் பல நாடுகளில் பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவற்றின் விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மேற்காசிய போரால் விநியோக வழித்தடம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. அதேபோல் வா்த்தகம், நிதி முதலீடும் பாதிக்கப்படக்கூடும். அதேநேரத்தில் இந்தியாவில் உள்ள வலுவான உள்நாட்டு தேவை, உறுதியான கொள்கை, நிதி அமைப்பு, தொடரும் பொதுமக்களின் முதலீடு ஆகியவை பொருளாதாரத்துக்கு உறுதுணையாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.