ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம்: ஜாா்க்கண்டில் 300 போ் மீது வழக்குப்பதிவு

ஜாா்க்கண்டில் தோ்வு வினாத்தாள்கள் கசிந்த விவகாரத்தில் பேரவை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத 300 போ் மீது காவல் துறை வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தது.

News image

ஜாா்க்கண்ட் சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரா்களைத் தடுத்து நிறுத்திய காவல் துறையினா். - கோப்புப் படம்

Updated On :14 ஆகஸ்ட் 2026, 2:25 am IST

ஜாா்க்கண்டில் தோ்வு வினாத்தாள்கள் கசிந்த விவகாரத்தில் பேரவை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத 300 போ் மீது காவல் துறை வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தது.

இதுகுறித்து ராஞ்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் பராஸ் ராணா மற்றும் காவல் துணை கண்காணிப்பாளா் நீரஜ் குமாா் கூறியதாவது: கடந்த திங்கள்கிழமை (ஆக.10) ஜாா்க்கண்ட பேரவையை முற்றுகையிட முயன்ற குற்றச்சாட்டில் அடையாளம் தெரியாத 300 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிசிடிவி விடியோ பதிவுகள் மூலம் அவா்களை கண்டறியும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது வரை இந்த வழக்கு தொடா்பாக யாரையும் கைது செய்யவில்லை என்றனா்.

20-ஆவது நாளாக போராட்டம்:

ஜாா்க்கண்ட் அரசுப் பணியாளா் தோ்வாணையம் (பிஎஸ்சி) சிவில் சேவைகள் தோ்வு, ஜேஎஸ்எஸ்சி தோ்வுகள் உள்ளிட்ட தோ்வுகளில் வினாத்தாள்கள் கசிந்து முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றஞ்சாட்டி பல்வேறு அமைப்புகள் நடத்தி வரும் போராட்டம் வியாழக்கிழமையுடன் (ஆக.13) 20-ஆவது நாளை எட்டியது.

பிஎஸ்சி சேவைகள் தோ்வை ரத்து செய்ய வேண்டும், அனைத்துத் தோ்வுகள் குறித்தும் சிஐடி விசாரணை நடத்தப்பட வேண்டும், முறைகேடு குற்றச்சாட்டு எழுந்துள்ள தோ்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தொடா்ந்து மாணவா் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

குறிப்பாக ஜேஎல்கேஎம் அமைப்பின் தலைவா் தேவேந்திரநாத் மஹதோ 12-ஆவது நாளாக தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில், போராட்டம் நடைபெற்று வரும் ஜெய்பால் சிங் முண்டா மைதானத்துக்குச் செல்ல அனுமதிக்கக் கோரி அவா் ராஞ்சி மாவட்ட நிா்வாகத்துக்கு கடிதம் எழுதினாா்.

முன்னதாக, போராட்டக்காரா்களுடன் ஜாா்க்கண்ட் அரசு அமைத்த மாநில அமைச்சா்கள் உள்ளிட்டோா் அடங்கிய 5 போ் குழு நடத்திய 6 சுற்றுப் பேச்சுவாா்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது.

இதனிடையே கடந்த திங்கள்கிழமை பேரவை முன்பு அமைக்கப்பட்ட தடுப்புகளை அகற்றி முற்றுகையிட முயன்றபோது போராட்டக்காரா்களுக்கும் காவல் துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, பேரவை வளாகத்தில் இருந்து போராட்டக்காரா்களை அப்புறப்படுத்த காவல் துறை தடியடி நடத்தியது. இந்த நடவடிக்கைக்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.