
ஏடிஎம்-ல் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்! எஸ்பிஐ அறிவிப்பு!
அடிப்படை சேமிப்பு வங்கி வைப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ள புதிய விதி குறித்து...
எஸ்பிஐ ஏடிஎம். - கோப்புப் படம்
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால், அதற்குக் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற புதிய விதியை பாரத ஸ்டேட் வங்கி வியாழக்கிழமை (ஆக. 20) அறிவித்துள்ளது.
எஸ்பிஐ கிளை வழியாகத் திறக்கப்பட்ட அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு (பிஎஸ்பிடி) கணக்குகளுக்கான பணம் எடுக்கும் கட்டணங்களை, வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் மாற்றி அமைத்துள்ளது.
அதன்படி, மாதத்தில் நான்கு முறை பணம் எடுப்பது தொடர்ந்து இலவசமாக இருக்கும். ஒரு மாதத்தில் நான்கு முறைக்கு மேல் பணம் எடுக்கும் பரிவர்த்தனைகளுக்கு, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தலா ரூ.15 மற்றும் அதனுடன் கூடுதலாக ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படும்.
இருப்பினும், அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி தொடர்ந்து இலவசமாகவே இருக்கும் என்பதை வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று எஸ்பிஐ சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எஸ்பிஐ அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு (பிஎஸ்பிடி) கணக்கு என்பது குறைந்தபட்ச சேமிப்புத் தொகையை பராமரிக்க வேண்டும் என்ற அவசியமில்லாத கணக்கு. இதற்கு காசோலை புத்தகமும் வழங்கப்படாது.
ஏற்கெனவே, ஐந்து பரிவர்த்தனைகளாக இருந்த விதியை தற்போது நான்கு பரிவர்த்தனைளாக எஸ்பிஐ மாற்றியமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
The State Bank of India announced a new rule on Thursday (August 20) stating that charges will be levied if SBI customers withdraw cash more than four times.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




