
தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய முயற்சியா? காங்கிரஸ் கேள்வி
தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு முயற்சிக்கிறதா? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது பற்றி...

ஜெய்ராம் ரமேஷ் - கோப்புப்படம்
தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு முயற்சிக்கிறதா? என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 23) கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 20 ஆம் தேதி தொடங்கி ஆக. 13 ஆம் தேதி வரை நடைபெற்றது. கூட்டத் தொடர் நிறைவு நாளின்போது, நாடாளுமன்றம் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு இதுவரை, 10 நாள்கள் கடந்தும் அதுகுறித்த எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. எனவே, தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு மீண்டும் தாக்கல் செய்ய உள்ளத்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்படுவதற்கான கால இடைவெளி பொதுவாக இரண்டு முதல் நான்கு நாள்கள் ஆகும். இருப்பினும், ஒத்திவைத்த அதே நாளில் நடைபெற்ற பல நிகழ்வுகளும் உள்ளன.
இதுவரை, 10 நாள்கள் கடந்தும் கூட்டத்தொடர் குறித்த எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. 2015 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில், 28 நாள்கள் ஒத்தி வைத்ததும், 2021 இல் 20 நாள்கள் ஒத்திவைத்த நிக்ழ்வும் நடைபெற்றது உண்மைதான். ஆனால் அப்போது எந்த சூழ்ச்சியும் நடைபெறவில்லை.
இந்த கால தாமதத்துக்கான காரணம் என்ன? தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றுவதற்கான மூன்றில் ஒரு பங்கு ஆதரவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறாரா? என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
The time gap between the adjournment of the Lok Sabha sine die and its prorogation is generally two to four days - although there are many instances when adjournment and prorogation have taken place on the very same day.
— Jairam Ramesh (@Jairam_Ramesh) August 23, 2026
Ten days have gone by since this Lok Sabha was adjourned⦠pic.twitter.com/62Sq20KdSc
Summary
Congress leader Jairam Ramesh questioned on Sunday (Aug. 23) whether the Central government is attempting to reintroduce the delimitation bill.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





