பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புசிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான முக்கிய அறிவிப்புகள்!

மத்திய பட்ஜெட்டில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான முக்கிய அறிவிப்புகள்

News image

மத்திய பட்ஜெட் - ANI

Updated On :1 பிப்ரவரி 2026, 4:59 pm IST

இந்தியாவில் வாழும் சாதாரண மனிதர்களைவிடவும், இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

2026 - 27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளிநாட்டு வாழ்பவர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சில முக்கிய சலுகைகளை அறிவித்துள்ளார்.

வெளிநாட்டு சுற்றுலா திட்ட தொகுப்புக்கான டிசிஎஸ் வரி விகிதத்தை 5 சதவீதம் மற்றும் 20 சதவீதத்திலிருந்து தற்போது 2 சதவீதமாகக் குறைக்கப்படும். இந்த தொகைக்கு அதிகபட்ச தொகையும் நிர்ணயிக்கப்படவில்லை.

இந்தியாவில் வசிக்காத வெளிநாட்டவரால் விற்பனை செய்யப்படும் அசையாச் சொத்துகளுக்கு, இந்தியாவில் குடியிருக்கும் சொத்து வாங்குபவரின் பான் எண் அடிப்படையிலான செலான் மூலம் டீடிஎஸ் கழிக்கப்பட்டு டெபாசிட் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் வாழும் இடம்பெயர்ந்த இந்தியர்கள் உள்பட, சிறு தொகை வரி செலுத்துவோர் ஆகியோர், தங்களது வருவாயை அல்லது வெளிநாட்டில் இருக்கும் சொத்துகள் குறித்து தெரிவிக்க ஆறு மாதங்களுக்கு ஒரே ஒரு முறை வாய்ப்பு அளிக்கப்படும்.

வெளிநாடுகளில், ரூ.20 லட்சத்திற்கும் குறைவான மொத்த மதிப்புள்ள அசையா சொத்துகளை வெளியிடாமல் இருப்பதால் ஏற்படும் எதிர்விளைவுகளிலிருந்து இந்த வாய்ப்பு காப்பாற்றும்.

அனுமானத்தின் அடிப்படையில் வரி செலுத்தும் அனைத்து வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் குறைந்தபட்ச மாற்று வரி (MAT) விலக்கு அளிக்கப்படும் என்பது உள்ளிட்ட சில அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.