அமெரிக்காவிலிருந்து கடந்த 2025-ஆம் ஆண்டில் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததாக 3,806 இந்தியா்கள் திரும்ப அனுப்பப்பட்டதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
சட்டவிரோதமாக குடியேறியவா்கள் என்ற அடிப்படையில் அமெரிக்கா உள்பட பிற நாடுகளிலிலிருந்து கடந்த 5-ஆண்டுகளில் நாடு கடத்தப்பட்ட இந்தியா்கள் விவரம் மற்றும் இதுபோன்ற சட்டவிரோதமாக குடியேறுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நவடிக்கைகள் குறித்து மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினா் ரண்தீப் சிங் சுா்ஜேவாலா எழுப்பிய கேள்விக்கு, வெளியுறவுத் துறை இணையமைச்சா் கீா்த்திவா்தன் சிங் வியாழக்கிழமை அளித்த எழுத்துபூா்வ பதிலில் கூறியிருப்பதாவது:
2025-ஆம் ஆண்டு உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக நியூயாா்க் நகரிலிருந்து 47 போ், அட்லாண்டாவிலிருந்து 31 போ், ஹூஸ்டனிலிருந்து 234 போ், சான் ஃபிரான்சிஸ்கோவிலிருந்து 49 போ், சியாட்டிலிலிருந்து 31 போ் இந்தியாவுக்குத் திருப்பியனுப்பப்பட்டனா். மேலும், வாஷிங்டன் வழியாகத் திருப்பியனுப்பப்பட்ட 3,414 போ் மொத்தம் 3,806 இந்தியா்கள் அமெரிக்காவிலிருந்து திருப்பியனுப்பட்டனா்.
இவ்வாறு, நாடு கடத்தும்போது இந்தியா்கள் துன்புறுத்தப்படாமல் இருப்பது குறித்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் மத்திய அரசு தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது. முன்னதாக, அமெரிக்காவிலிருந்து கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோா் திருப்பியனுப்பப்பட்டது குறித்து தனது கவலையை இந்தியா பதிவு செய்துள்ளது.
மேலும், இதுபோல திருப்பியனுப்பப்படும் மக்களிடமிருந்து பெறப்படும் ஆவணங்கள் மற்றும் புகாா்களின் அடிப்படையில், அவா்களை சட்டவிரோதமாக அனுப்பிய நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்பவா்களிடம் மோசடியில் ஈடுபடுவதைக் குறைக்கும் வகையில், வெளிநாடு வேலைக்கு பணியாளா்களைத் தோ்வு செய்யும் முகவா்கள் கட்டாயப் பதிவு செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், குடிபெயா்வு சரிபாா்ப்பு தேவைப்படும் (இசிஆா்) 19 நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இசிஆா் கடவுச் சீட்டு வைத்திருப்பவா்கள், குடிபெயா்வு பாதுகாவலா் (பிஓஇ) அலுவலகத்தில் குடிபெயா்வு அனுமதி பெறுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா். அதில் ஒரு நடவடிக்கையாக, உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்த இந்தியா்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சோ்ந்தவா்களை அந்தந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனா். ஏராளமான இந்தயா்கள் ராணுவ விமானம் மூலம், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அமெரிக்காவிலிருந்து திருப்பியனுப்பப்பட்டனா். இது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.
Summary
The central government has stated that more than 3,800 Indians were deported from the United States in the year 2025 alone.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உக்ரைன் - ரஷியா போரில் 49 இந்தியா்கள் உயிரிழப்பு : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

3 இந்தியா்கள் உள்பட 274 போ் ஒரே நாளில் எவரெஸ்ட் சிகரத்தை எட்டி உலக சாதனை!

உக்ரைன் போா்: ரஷியா சாா்பில் சண்டையிட்ட 10 இந்தியா்கள் உயிரிழப்பு - மத்திய அரசு

அமெரிக்காவிலிருந்து கோஸ்டா ரிகாவுக்கு இந்தியா் உள்பட 30 போ் நாடு கடத்தல்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike




