

பாகிஸ்தானின் வடமேற்கு கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் இரண்டு தனித்தனி உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கைகளில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் 24 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பிப்ரவரி 4 - 5 தேதிகளில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நடந்த இரண்டு தனித்தனி நடவடிக்கையில் ஃபித்னா-அல்-கவாரிஜ் அமைப்பைச் சேர்ந்த 24 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஐஎஸ்பிஆர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஃபித்னா-அல்-கவாரிஜ் என்பது தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபன் பாகிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளைக் குறிக்க அரசால் பயன்படுத்தப்படும் ஒரு சொல் ஆகும்.
மாகாணத்தின் ஒரக்ஸாய் மற்றும் கைபர் மாவட்டங்களில் இரண்டு உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஒரக்ஸாய் மாவட்டத்தில் நடத்தப்பட்ட நடவடிக்கையின்போது 14 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதேசமயம், கைபரில் மற்றொரு உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கையின்போது 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பயங்கரவாதிகளின் உயிரிழப்புகள் சாதனை அளவில் இருந்தபோதிலும், 2023-ல் பாகிஸ்தானில் பயங்கரவாத வன்முறை கடுமையாக அதிகரித்தது. பயங்கரவாதத் தாக்குதல்கள் 34 சதவீதமும், பயங்கரவாதம் தொடர்பான உயிரிழப்புகள் ஆண்டுக்கு ஆண்டு 21 சதவீதமும் அதிகரித்துள்ளதாக இஸ்லாமாபாத்தை தளமாகக் கொண்ட பாகிஸ்தான் அமைதி ஆய்வுக் கழகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.