கொச்சி கோயிலில் யானை திடீரென மிரண்டதில் அதன் பாகன் காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
கேரள மாநிலம், கொச்சியில் திரிபுனித்துரா பூர்ணத்ரயீசா கோயில் உள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 'அதாழ சீவேலி' சடங்கிற்காக யானை வரிசையில் நிற்க வைக்கப்பட்டிருந்தது.
அப்போது சாமப்புழா உன்னிகிருஷ்ணன் என்ற ஆண் யானை, திடீரென ஆக்ரோஷமாக மாறியது.
இந்த சம்பவத்தில் அதன் பாகன் காயமடைந்தார். பின்னர் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
ஆக்ரோஷமடைந்த யானை, கோயில் அலுவலகத்தை நோக்கிச் சென்று அங்கேயே நின்றது.
இந்தச் சம்பவம் காரணமாக பக்தர்கள் பீதியடைந்தனர். இருப்பினும் கோயில் அதிகாரிகள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்து கூட்டத்தைப் பாதுகாப்பாக வெளியேற்றினர்.
கொச்சியில் உள்ள கோயில்களில் திருவிழாக்களின் போது பயன்படுத்தப்படும் யானைகள், அவ்வப்போது மதம் பிடித்து அட்டகாசம் செய்வது மற்றும் பாகன்களை காயப்படுத்துவது போன்ற சம்பவங்கள் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
An elephant ran amok at the Tripunithura Poornathrayeesa Temple here on Sunday, injuring its mahout, police said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்

நாசிக்கில் அடுத்தடுத்து 4 நில அதிர்வுகள்!

பள்ளி மாணவா் திடீா் உயிரிழப்பு

பண முறைகேடு வழக்கு - கேரள முன்னாள் முதல்வா் மகளிடம் அமலாக்கத் துறை விசாரணை
விடியோக்கள்

2 கோடி கேட்டு நோட்டீஸ்,அதிர்ச்சி அடைந்த பெண் தொழிலாளி | GST NOTICE | Tirupathur | Woman daily-wager




