ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

மேற்கு வங்கத்தில் ஒரே மாவட்டத்தில் 90 எச்ஐவி பாதிப்புகள் உறுதி!

மேற்கு வங்கத்தின் கிழக்கு பர்தமான் மாவட்டத்தில் 90 எச்ஐவி பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது குறித்து...

News image

கோப்புப் படம்

PTI

Updated On :10 பிப்ரவரி 2026, 12:27 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மேற்கு வங்க மாநிலத்தின் கிழக்கு பர்தமான் மாவட்டத்தில் சுமார் 90 பேருக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு பர்மான் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வசித்து வரும் சுமார் 90 பேருக்கு எச்ஐவி பாதிப்புகள் ஏற்பட்டு அங்கு பெரும் சுகாதார அச்சுறுத்தல் உருவாகியுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரபல மருத்துவர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மூத்த கார்பரேட் அதிகாரிகள் ஆகியோர் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

இதையடுத்து, அவர்கள் பணியாற்றும் இடங்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கிழக்கு பர்தமான் மாவட்டத்தில் 50 எச்ஐவி பாதிப்புகள் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது 90 ஆக அதிகரித்துள்ளது. மேலும், பாதுகாப்பற்ற முறையில் உறவு கொண்ட தன்பாலினச் சேர்கையாளர்களிடம் இந்தப் பாதிப்புகள் அதிகம் பரவியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும், இந்த நோய் பரவிய வழிகள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன்மூலம், பாதிக்கப்பட்டவர்களில் சிலர் சமூக ஊடகங்களின் வழியாக இணைந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், எச்ஐவி பாதிப்புகள் குறித்து கிழக்கு பர்தமான் மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருவதாக, தலைமை சுகாதார மருத்துவ அதிகாரி ஜெயராம் ஹெம்பிரோம் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.