மேற்கு வங்க மாநிலத்தின் கிழக்கு பர்தமான் மாவட்டத்தில் சுமார் 90 பேருக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு பர்மான் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வசித்து வரும் சுமார் 90 பேருக்கு எச்ஐவி பாதிப்புகள் ஏற்பட்டு அங்கு பெரும் சுகாதார அச்சுறுத்தல் உருவாகியுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரபல மருத்துவர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மூத்த கார்பரேட் அதிகாரிகள் ஆகியோர் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
இதையடுத்து, அவர்கள் பணியாற்றும் இடங்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கிழக்கு பர்தமான் மாவட்டத்தில் 50 எச்ஐவி பாதிப்புகள் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது 90 ஆக அதிகரித்துள்ளது. மேலும், பாதுகாப்பற்ற முறையில் உறவு கொண்ட தன்பாலினச் சேர்கையாளர்களிடம் இந்தப் பாதிப்புகள் அதிகம் பரவியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும், இந்த நோய் பரவிய வழிகள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன்மூலம், பாதிக்கப்பட்டவர்களில் சிலர் சமூக ஊடகங்களின் வழியாக இணைந்தது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால், எச்ஐவி பாதிப்புகள் குறித்து கிழக்கு பர்தமான் மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருவதாக, தலைமை சுகாதார மருத்துவ அதிகாரி ஜெயராம் ஹெம்பிரோம் தெரிவித்துள்ளார்.
Summary
Around 90 HIV cases have been confirmed in the East Bardhaman district of West Bengal.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேட்டூர் அணை கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு இல்லை! விவசாயிகள் கவலை!

7000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு எச்ஐவி பாதிப்பு!

திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

நறுமண சிகிச்சையால் தூக்க நலன் மேம்படும்: ஆய்வில் உறுதி
விடியோக்கள்

உதயநிதியை இளைய கலைஞர் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்! | R.S. Bharathi | DMK | TVK




