தலைநகர் புது தில்லியில் பிரதமர் அலுவலகத்தின் புதிய கட்டடமான சேவா தீர்த் மற்றும் கர்த்தவ்ய பவன் 1 மற்றும் 2ஐ பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 13 ஆம் தேதி (நாளை) திறந்துவைப்பார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்,
தலைநகர் தில்லியில் அரசுக் கட்டடங்களை மறுநிர்மாணம் செய்யும் பணி நடைபெற்று வந்தது. அதன் ஒரு பகுதியாகப் பிரதமர் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. தற்போது கட்டுமானப் பணி நிறைவடைந்துள்ளது.
இதற்கு முன்னதாக பல ஆண்டுகளாக இருந்த அரசு அலுவலகங்கள் சிதிலமடைந்த நிலையில், மிகப் பழமையான உள்கட்டமைப்பில் செயல்பட்டன. இதனால் செயல்பாட்டுத் திறமையின்மை, ஒருங்கிணைப்பு சவால்கள், அதிகரிக்கும் பராமரிப்பு செலவுகள் என பணிச் சூழல்களுக்கு உகந்ததாக இல்லாமல் இருந்தது.
அதனடிப்படையில், புதிய கட்டட வளாகங்கள் நவீன, எதிர்காலத்திற்கு உகந்த வசதிகளுடன் நிர்வாக செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
இந்தக் கட்டடத்தில் பிரதமர் அலுவலகம் மட்டுமின்றி மத்திய அமைச்சரவை செயலகம், தேசியப் பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் வெளிநாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான இந்தியா ஹவுஸ் ஆகியவை இடம்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. முன்னதாக இது வெவ்வேறு இடங்களில் அமைந்திருந்தன.
இந்த நிலையில், பிரதமர் அலுவலகத்தின் புதிய கட்டத்தின் பெயர் "சேவா தீர்த்" (சேவைத் தலம்) என்றும், கர்த்தவ்ய பவன் (மத்திய அரசின் தலைமைச் செயலகம்) என்றும் அழைக்கப்படுகிறது.
மேலும், கர்த்தவ்ய பவன் 1 மற்றும் 2ல் சட்டம், பாதுகாப்பு, நிதி, சுகாதாரம், விவசாயம் மற்றும் பல முக்கிய அமைச்சகங்களை உள்ளடக்கியுள்ளன.
இரண்டு கட்டட வளாகங்களும் டிஜிட்டல் முறையில் ஒருங்கிணைக்கப்பட்ட அலுவலகங்கள், கட்டமைக்கப்பட்ட பொது இடைமுக மண்டலங்கள் மற்றும் வரவேற்பு வசதிகளைக் கொண்டுள்ளன. இவ்வாறு பிரதமர் அலுவலக அறிக்கை வெளியிட்டுள்ளது.
Summary
Prime Minister Narendra Modi will inaugurate the Seva Teerth, the new building of the Prime Minister's Office, and Kartavya Bhawan 1 and 2, on February 13, his office said on Wednesday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாலுமிகள் பாதுகாப்பு: டிரம்ப்பிடம் பிரதமர் மோடி கேள்வி!
பிரதமர் மோடி மிகவும் அழகானவர்: டிரம்ப் புகழாரம்

பிரான்ஸில் ஜூன் 17-ல் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு!

பிரதமர் மோடி இன்று பிரான்ஸ், ஸ்லோவாக்கியா பயணம்!
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK




