அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் விலகல்

காங்கிரஸ் கட்சியில் இருந்து அசாமின் முன்னாள் மாநிலத் தலைவர் பூபென் குமார் போரா விலகியுள்ளார்.
அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் விலகல்
PTI
Updated on
1 min read

காங்கிரஸ் கட்சியில் இருந்து அசாமின் முன்னாள் மாநிலத் தலைவர் பூபென் குமார் போரா விலகியுள்ளார்.

தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு போரா தனது ராஜிநாமா கடிதத்தை அனுப்பியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

கட்சித் தலைமையால் தான் புறக்கணிக்கப்பட்டதாகவும், மாநிலப் பிரிவில் தனக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும் கார்கேவுக்கு அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பட்டுள்ளார்.

2021 முதல் 2025 வரை அசாம் காங்கிரஸ் மாநிலத் தலைவராக போரா இருந்தார். கடந்த ஆண்டு அவருக்குப் பதிலாக கௌரவ் கோகோய் தலைவராக நியமிக்கப்பட்டார்.

ராஜிநாமா செய்த பூபென் குமார், இரண்டு முறை அசாமின் பிஹ்புரியா தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார்.

அசாமில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பூபென் குமாரின் விலகல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

Summary

In a major jolt to the Congress ahead of the Assembly polls in Assam, the party's former state unit chief Bhupen Kumar Borah has resigned, according to sources.

அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் விலகல்
ராஜஸ்தான்: ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com