அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

பாஜகவில் இணைந்தவர்கள் முக்கியமற்றவர்களாக மாறிவிட்டனர்: காங்கிரஸ் தலைவர்!

அசாம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் பூபன் போரா பாஜகவில் இணைவது குறித்து கௌரவ் கோகோய் கருத்து..

News image

அசாம் காங்கிரஸ் தலைவர் கௌரவ் கோகோய்

Updated On :18 பிப்ரவரி 2026, 8:11 am

ஆளும் பாஜகவில் இணைந்தவர்கள் அரசியல் பயணத்தில் முக்கியமற்றவர்களாக மாறிவிட்டதாக அசாம் காங்கிரஸ் தலைவர் கௌரவ் கோகோய் தெரிவித்தார்.

அசாம் காங்கிரஸின் மாநில முன்னாள் தலைவர் பூபேன் போரா அக்கட்சியிலிருந்து திங்களன்று விலகியுள்ளார். வரும் பிப்.22-ஆம் தேதி பாஜகவில் இணையவுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் கௌரவ் கோகோய் பேசியதாவது,

பாஜகவில் இணைந்தவர்கள் முக்கியமற்றவர்களாக மாறிவிட்டனர். சர்பானந்தா சோனோவால் மற்றும் இன்னும் பலரை நாம் உதாரணமாகக் காணலாம்.

பிப்ரவரி 22-ம் தேதி பாஜகவில் சேர உள்ள முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் பூபன் குமார் போராவுக்கும் இதே நிலை ஏற்படும் என்று அவர் குற்றம் சாட்டினார்.

ஏஜிபி கட்சி (சோனோவாலின் முந்தைய கட்சி) அழிவின் விளிம்பில் உள்ளது.

பூபன் போரா பாஜகவில் இணைவது பற்றி நான் குறிப்பாகப் பேசத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் உண்மையான காங்கிரஸுக்கும் பழைய காங்கிரஸுக்கும் இடையேயான போராட்டம் இருக்கும்.

பாஜகவில் காங்கிரஸ் கட்சியின் 15 ஆண்டுக்கால ஆட்சியில் மிகவும் ஊழல் நிறைந்த பழைய காங்கிரஸ் தலைவர்கள் நிறைந்துள்ளனர்.

அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, போராவை காங்கிரஸின் கடைசி ஹிந்து தலைவர் என்று கூறியது குறித்துப் பேசிய கோகோய்,

பாஜக தலைவர் அசாமின் ஜின்னா என்றும், அரசியல்வாதிகளுக்கு ஹிந்து சான்றிதழ்களை வழங்குவதை அவர் நிறுத்த வேண்டும் என்றும் குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் ஒரு கடல் போன்றது; நாம் அனைவரும் அதில் வெறும் நீர்த்துளிகள். நமது தந்தையர் மற்றும் முன்னோர்கள் இருப்பதற்கு முன்பே காங்கிரஸ் இருந்தது.

பூபன் போரா கட்சியிலிருந்து வெளியேறுவது சட்டப்பேரவைத் தேர்தலில், எந்தவித பாதிப்புகளையும் ஏற்படுத்தாது என்று அவர் கூறினார்.

Summary

Assam Congress president Gaurav Gogoi on Wednesday said those who joined the ruling BJP have become "insignificant" in their political journey.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.