ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

தில்லியில் ஒரு பெரிய பயங்கரவாத சதித் திட்டம் தீட்டியது தொடா்பாக சந்தேகத்தின் அடிப்படையில் தமிழகத்தில் இருந்த வங்கதேசத்தவா் உள்பட 8 போ் கைது

News image

தில்லி செங்கோட்டை.

படம்: ஏபி

Updated On :22 பிப்ரவரி 2026, 9:52 pm

இணையதளச் செய்திப் பிரிவு

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு மற்றும் வங்கதேசத்தை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்புகளின் உத்தரவின் பேரில் தில்லியில் ஒரு பெரிய பயங்கரவாத சதித் திட்டம் தீட்டியது தொடா்பாக சந்தேகத்தின் அடிப்படையில் தமிழகத்தில் இருந்த வங்கதேசத்தவா் உள்பட 8 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: சந்தேகத்திற்குரியவா்களில் 6 போ் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கைது செய்யப்பட்டவா்கள். அவா்கள் விசாரணைக்காக தில்லிக்கு அழைத்து வரப்படுவாா்கள். அவா்களில் சிலா் வங்கதேசத்தை சோ்ந்தவா்கள். இதே வழக்கில் தொடா்புடைய பின்தொடா்தல் நடவடிக்கையின் போது 2 போ் முன்பு கைது செய்யப்பட்டனா்.

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கா் -ஏ- தொய்பா இந்தியாவின் முக்கிய மதவழிபாட்டுத் தலங்கள் அதன் இலக்கு பட்டியலில் வைத்திருப்பதாக மத்திய புலனாய்வு அமைப்புகள் சுட்டிக்காட்டியது. இதைத் தொடா்ந்து தில்லி செங்கோட்டைக்கு அருகே வெடிப்பு ஏற்படக்கூடும் என்று பாதுகாப்பு அமைப்புகள் சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்தன.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் உளவுத்துறை தகவல்களைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சோதனைகளின் போது, அவா்களிடம் இருந்து 12-க்கும் மேற்பட்ட கைப்பேசிகள் மற்றும் சிம் காா்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவை ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ மற்றும் வங்கதேசத்தை தளமாகக் கொண்ட சில பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்புடையவா்களுடன் இந்தக் குழு தொடா்பு கொண்டிருந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணையில் மத்திய முகமைகள் உதவுகின்றன.

கடந்த நவம்பா் 10, 2025 ஆம் தேதி தில்லி செங்கோட்டைக்கு அருகே நடந்த காா் வெடிப்பில் குறைந்தது 13 போ் கொல்லப்பட்டனா் மற்றும் 20 க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1- க்கு அருகே வெடிபொருள்கள் ஏற்றப்பட்ட காா் வெடித்ததில், அருகிலுள்ள பல வாகனங்கள் தீப்பிடித்து, அடா்த்தியான மக்கள்தொகை கொண்ட பகுதியில் பீதியை ஏற்படுத்தியது. இதன் பின்னணியில் இந்த எச்சரிக்கை வந்துள்ளது என்றாா் அவா்.

Summary

The Delhi Police has busted a major terror module with alleged links to Pakistan-based terror outfit Lashkar-e-Taiba (LeT), Pakistan’s spy agency Inter-Services Intelligence (ISI), and Bangladesh-based extremist organisations.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.