ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
ஜம்மு-காஷ்மீர்.
ஜம்மு-காஷ்மீர். Photo |PTI
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள தொலைதூர வனப்பகுதியில் இரண்டு பயங்கரவாதிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் தகவலைத் தொடர்ந்து, சத்ரூ காடுகளில் பாதுகாப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர்.

அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுற்றிவளைக்கப்பட்ட பகுதிக்கு கூடுதல் படைகள் விரைந்துள்ளன என்று அவர்கள் மேலும் கூறினர்.

பனியால் சூழப்பட்ட சத்ரூ வனப்பகுதியில் கடந்த மாதம் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே 5க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சண்டைகள் நடந்தன. இந்த சண்டைகளில் வீரர் மற்றும் ஒரு பயங்கரவாதி பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

The gunfight started when army troops launched a search operation in Chatroo forests following information about the presence of two suspected terrorists.

ஜம்மு-காஷ்மீர்.
கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com