11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

News image

ஜம்மு-காஷ்மீர். - Photo |PTI

Updated On :22 பிப்ரவரி 2026, 7:28 am

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள தொலைதூர வனப்பகுதியில் இரண்டு பயங்கரவாதிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் தகவலைத் தொடர்ந்து, சத்ரூ காடுகளில் பாதுகாப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர்.

அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுற்றிவளைக்கப்பட்ட பகுதிக்கு கூடுதல் படைகள் விரைந்துள்ளன என்று அவர்கள் மேலும் கூறினர்.

பனியால் சூழப்பட்ட சத்ரூ வனப்பகுதியில் கடந்த மாதம் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே 5க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சண்டைகள் நடந்தன. இந்த சண்டைகளில் வீரர் மற்றும் ஒரு பயங்கரவாதி பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

The gunfight started when army troops launched a search operation in Chatroo forests following information about the presence of two suspected terrorists.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.