ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள தொலைதூர வனப்பகுதியில் இரண்டு பயங்கரவாதிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் தகவலைத் தொடர்ந்து, சத்ரூ காடுகளில் பாதுகாப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர்.
அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுற்றிவளைக்கப்பட்ட பகுதிக்கு கூடுதல் படைகள் விரைந்துள்ளன என்று அவர்கள் மேலும் கூறினர்.
பனியால் சூழப்பட்ட சத்ரூ வனப்பகுதியில் கடந்த மாதம் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே 5க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சண்டைகள் நடந்தன. இந்த சண்டைகளில் வீரர் மற்றும் ஒரு பயங்கரவாதி பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
The gunfight started when army troops launched a search operation in Chatroo forests following information about the presence of two suspected terrorists.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாகிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டா் விபத்து

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மோதல்களில் கொல்லப்படும் மக்கள்- மத்திய அமைச்சா் சஞ்சய் சேத்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போலீஸாரால் 20 போ் சுட்டுக் கொலை: சா்வதேச சமூகம் கண்டிக்க இந்தியா வலியுறுத்தல்
இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையே தற்காலிக சண்டை நிறுத்தம்: டிரம்ப் தகவல்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |




