ஜார்க்கண்ட் ஆம்புலன்ஸ் விமான விபத்தில் சஞ்சய் பலியாவதற்கு முன்னதாக அவரது சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினர் ரூ. 8 லட்சம் கடனும் வாங்கியுள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஓர் உணவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சஞ்சய் (41) என்பவர் பலத்த காயமடைந்தார். இதனைத் தொடர்ந்து, சிகிச்சைக்காக அவரை உள்ளூர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இருப்பினும், அவரது உடல்நிலை மோசமானதால், மேல் சிகிச்சைக்காக தில்லியில் உள்ள வேறொரு மருத்துவமனையில் அனுமதிக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸ் விமானம் - பிடிஐ
இதனையடுத்து, தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையின் சிகிச்சைக்காகவும், ஆம்புலன்ஸ் விமானத்தின் வாடகைக்காகவும் அவரது குடும்பத்தினர் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து ரூ. 8 லட்சம் கடன் வாங்கினர்.
இதனைத் தொடர்ந்து, சிகிச்சைக்காக விமானத்தில் சஞ்சயுடன் அவரது மனைவி அர்ச்சனா, உறவினர் துருவ்வும் உடன் சென்றனர்.
இந்த நிலையில்தான், ராஞ்சியில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே சத்ரா மாவட்டத்தில் விமானம் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சஞ்சய், அர்ச்சனா, துருவ், விமானிகள், மருத்துவக் குழுவினர் என விமானத்தில் பயணம் செய்த 7 பேரும் பலியாகினர்.
Summary
Ranchi air ambulance victims' family had taken Rs 8 lakh loan for plane
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
போலி ஆவணம் மூலம் வங்கியில் ரூ.25 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளா் கைது

எச்டிஎஃப்சி, பந்தன் வங்கி கடன் வழங்கல் 12% அதிகரிப்பு
சின்னசேலம் அருகே கார் விபத்தில் மாமியார், மருமகள் பலி!

லக்னெளவில் ஷிகர் தவான் - புகைப்படங்கள்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


