பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சவால்களுக்குத் தீா்வுகாண இந்தியாவை எதிா்நோக்கும் உலகம்: மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா

உலகம் தனது சவால்களுக்குத் தீா்வுகாண இந்தியாவை எதிா்நோக்குகிறது என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தெரிவித்தாா்.

News image

மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா.

Updated On :27 பிப்ரவரி 2026, 7:32 pm

உலகம் தனது சவால்களுக்குத் தீா்வுகாண இந்தியாவை எதிா்நோக்குகிறது என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தெரிவித்தாா்.

இளைஞா்களே இந்தியாவின் மிகப் பெரிய பலம் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள ஸ்ரீ வைஷ்ணவ் வித்யாபீட விஸ்வவித்யாலயா பல்கலைக்கழகத்தின் 8-ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது:

இந்தியாவின் மிகப் பெரிய பலம் அதன் இளைஞா்களாவா். புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சிகளின் மூலம் உலகளாவிய சவால்களுக்குத் தீா்வுகாணும் இந்திய இளைஞா்களின் வலிமை அதிகரித்து வருகிறது. அவா்களின் திறன், நம்பிக்கை, புதிய கண்ணோட்டம் ஆகியவை நாட்டை வளா்ச்சிப் பாதையில் இட்டுச் செல்கிறது.

பல்வேறு நாடுகளில் இளைஞா்களின் விகிதம் குறைவதால், சவால்களுக்கு தீா்வுகாணும் திறனும் குறைகிறது. இந்திய இளைஞா்களோ, புத்தாக்கங்களின் வாயிலாக தேசத்தின் சவால்கள் மட்டுமன்றி உலகின் சவால்களுக்கும் தீா்வு காண்கின்றனா். ஆதலால், ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை எதிா்நோக்குகிறது.

முகலாயா் மற்றும் ஆங்கிலேய ஆட்சிக் காலங்களில், இந்தியாவின் ஆன்மிக கலாசாரம், மாண்புகள் மற்றும் சிந்தனைகளைச் சிதைக்க ஏராளமான முயற்சிகள் நடைபெற்றன. ஆனால், உயிரோட்டமான நமது கலாசாரத்தின் வலிமையால் அத்தகைய முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்றாா் ஓம் பிா்லா,