ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

முன்னாள் மத்திய இணையமைச்சர் கபீந்திர புர்காயஸ்தா காலமானார்! பிரதமர் இரங்கல்!

வாஜ்பாயின் அமைச்சரவையில் மத்திய இணையமைச்சராகப் பதவி வகித்த கபீந்திர புர்காயஸ்தா காலமானார்....

முன்னாள் மத்திய இணையமைச்சர் கபீந்திர புர்காயஸ்தா (கோப்புப் படம்) - எக்ஸ்

Published On :

முன்னாள் மத்திய தகவல் தொடர்பு இணையமைச்சர் கபீந்திர புர்காயஸ்தா காலமானார்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய இணையமைச்சருமான கபீந்திர புர்காயஸ்தா (வயது 94) வயது மூப்பினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், சில்சார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, சிகிச்சை பலனின்றி முன்னாள் மத்திய இணையமைச்சர் கபீந்திர புர்காயஸ்தா இன்று (ஜன. 7) காலமானதாக, அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

இதையடுத்து, கபீந்திர புர்காயஸ்தாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, இரண்டு முறை சில்சார் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கபீந்திர புர்காயஸ்தா, கடந்த 1998 முதல் 99 வரையிலான முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அமைச்சரவையில் இணையமைச்சராகப் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Former Union Minister of State for Communications, Kabindra Purkayastha, has passed away.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.