12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

பாஜக எம்.பி.யின் 31 வயது மகன் காலில் விழுந்த 73 வயது எம்.எல்.ஏ.

மத்திய அமைச்சரின் 31 வயது மகனின் காலில் 73 வயது எம்.எல்.ஏ. தேவேந்திர குமார் ஜெயின் விழ முயன்றதாக விடிவோ வெளியாகி சர்ச்சை

Published On :

பாஜக எம்.பி.யும் மத்திய அமைச்சருமான ஜோதிராதித்ய சிந்தியாவின் மகன் காலில் 73 வயது எம்.எல்.ஏ. தேவேந்திர குமார் ஜெயின் விழுந்து வணங்க முற்பட்டது சர்ச்சையாகியுள்ளது.

மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ.வான தேவேந்திர குமார் ஜெயின் (73) பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பாஜக எம்.பி.யும் மத்திய அமைச்சருமான ஜோதிராதித்ய சிந்தியாவின் மகன் மஹாரியமான் சிந்தியாவும் கலந்து கொண்டார்.

இந்தக் கொண்டாட்டத்தின்போது, கேக் வெட்டி, தேவேந்திர குமாருக்கு மஹாரியமான் ஊட்டி விட்டார். இதனைத் தொடர்ந்து, 31 வயதேயான மஹாரியமானின் காலில் 73 வயதான தேவேந்திர குமார் விழுந்து வணங்க முயன்றார்.

தன்னைவிட 41 வயது இளையவரின் காலில் விழுந்து வணங்க முயன்ற தேவேந்திர குமாரின் இந்தச் செயல் விடியோவாக சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.

இருப்பினும், இதுகுறித்து தேவேந்திர குமார் கூறுகையில், "எனக்காக மஹாரியமான் பிறந்தநாள் பாடியதால் நான் உணர்ச்சிவசப்பட்டேன். இதனால்தான், அவரது கால்களைத் தொட முயன்றேன். இது முற்றிலும் கலாசார மற்றும் என்னுடைய தனிப்பட்ட வெளிப்பாடு.

இளம் வயதினரின் கால்களைத் தொடுவது குறித்து அரசியலமைப்பில் எதுவும் எழுதப்படவில்லை. இவர்கள்தான் இதனை வைரலாக்குகின்றனர். அதுபற்றி எனக்குக் கவலையில்லை" என்று தெரிவித்தார்.

Summary

73 year old BJP MLA Devendra Kumar Jain Touches Feet Of MP Jyotiraditya Scindia's 31 Year Old Mahaaryaman Scindia

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.