மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

அமெரிக்கா: ஒரு லட்சம் பேரை கொல்லக்கூடிய 140 கிலோ போதைப்பொருள்களுடன் 2 இந்தியர்கள் கைது

அமெரிக்காவில் 7 மில்லியன் டாலர் மதிப்பிலான 140 கிலோ போதைப்பொருள் கடத்தியதாக 2 இந்தியர்கள் கைது

News image

கைது செய்யப்பட்ட குர்பிரீத் சிங் - ஜஸ்வீர் சிங் - கோப்புப் படம்

Updated On :8 ஜனவரி 2026, 6:34 pm IST

அமெரிக்காவில் 140 கிலோ போதைப்பொருள் கடத்தியதாக 2 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் சட்டவிரோதமாக நுழைந்ததாகக் கூறப்படும் குர்பிரீத் சிங் மற்றும் ஜஸ்வீர் சிங் இருவரும் 7 மில்லியன் டாலர் மதிப்பிலான 140.16 கிலோ கொகைன் போதைப்பொருளைக் கடத்தியதாக அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை கைது செய்தது.

கனரக லாரியின் உள்ளே மறைத்து கடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்த போதைப்பொருளில் சுமார் 1.2 கிராம் அளவே 1,13,000 பேரைக் கொல்லக்கூடியது என்றும் பாதுகாப்புத் துறை கூறினர்.

கைது செய்யப்பட்ட இருவரும் நாடுகடத்தல் கைதிகளாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

இருப்பினும், லாரிக்குள் போதைப்பொருள் இருந்தது குறித்து தங்களுக்குத் தெரியாது என்றும், ஓர் உணவகத்துக்கு செல்லுமாறு நிறுவனம் தங்களை அறிவுறுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்ட இந்தியர்கள் இருவரும் கூறுகின்றனர்.

Summary

Two illegal migrants arrested for trafficking over 309 pounds of cocaine in semi-truck in US

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.