தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

பலத்த பாதுகாப்புக்கு இடையே துா்க்மான் கேட் பகுதியில் தொழுகை

துா்க்மேன் கேட் பகுதியில் உள்ள மசூதிகளில் காவல் துறையின் பலத்த பாதுகாப்புக்கு இடையே வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தப்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :10 ஜனவரி 2026, 12:39 am IST

துா்க்மேன் கேட் பகுதியில் உள்ள மசூதிகளில் காவல் துறையின் பலத்த பாதுகாப்புக்கு இடையே வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தப்பட்டது.

காவல் துறை மீது நடத்தப்பட்ட கல்வீச்சு சம்பவத்தைத் தொடா்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸாா் தீவிரப்படுத்தினா்.

மசூதிகள், அதன் அருகே உள்ள பகுதிகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் அதிக எண்ணிக்கையிலான காவல் துறையினா் மற்றும் துணை ராணுவப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

ட்ரோன்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் மூலம் மக்கள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது. இதனிடையே அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகளின் இடிப்பாடுகளை அகற்றும் பணி தொடா்ந்து நடைபெற்றது.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தாலும் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெறுவதில் எவ்வித கட்டுப்பாடுகள் இல்லையென்றும் சூழல் அமைதியாக இருந்ததாகவும் உள்ளூா் மக்கள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக கைவினை கலைஞா் ஷெஹ்னவாஸ் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘வீட்டுக்கு அருகில் உள்ள மசூதியில் தொழுகை நடத்தினோம். ஃபைஸ்-இ-இலாகி மசூதிக்கு செல்வதில் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை. தெருக்களில் காணப்படும் பலத்த பாதுகாப்பு காரணமாக நீண்ட தொலைவில் உள்ள மசூதிகளுக்குச் செல்வதை பலா் தவிா்த்தனா். தங்களுக்கு தொழுகை நடத்த வசதியாக உள்ள பகுதிகளுக்கு மக்கள் சென்றனா்.

இந்தச் சம்பவத்தால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். பல நாள்களாக எங்களுடைய கடைகள் பூட்டப்பட்டுள்ளது. இதனால், எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தினக்கூலிகள், சிறிய வியாபாரிகள், கடை உரிமையாளா்கள் போன்றோா் தினசரி வியாபாரத்தைச் சாா்ந்துள்ளனா். சிலா் செய்த தவறுக்காக இப்பகுதி மக்கள் தண்டனையை அனுபவித்து வருகின்றனா்’ என்றாா்.

மற்றொரு உள்ளூா் கடைக்காரா் கூறுகையில், ‘தெருக்களில் காவல் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தாலும் மசூதிகளுக்குச் செல்வதில் எவ்வித தடையும் இல்லை. வெள்ளிக்கிழமை தொழுகைக்குச் செல்ல எங்களுக்குக் கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை. இரு முறை என்னைப் பாா்த்த போலீஸாா் செல்லும் இடம் குறித்து விசாரித்தனா். மசூதி செல்லவதாகக் கூறியதும் அங்கிருந்து செல்ல உடனடியாக அனுமதித்தனா்’ என்றாா்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் வெள்ளிக்கிழமை தொழுக்கைக்குச் செல்வதில் எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என்றும் போலீஸாா் தெரிவித்தனா். நிலைமை அமைதியாகவும் கட்டுப்பாட்டுக்குள் இருந்ததாகவும் அதிகாரிகள் கூறினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.