சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பலத்த பாதுகாப்புக்கு இடையே துா்க்மான் கேட் பகுதியில் தொழுகை

துா்க்மேன் கேட் பகுதியில் உள்ள மசூதிகளில் காவல் துறையின் பலத்த பாதுகாப்புக்கு இடையே வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தப்பட்டது.

News image
கோப்புப் படம்
Updated On :9 ஜனவரி 2026, 7:09 pm

தினமணி செய்திச் சேவை

துா்க்மேன் கேட் பகுதியில் உள்ள மசூதிகளில் காவல் துறையின் பலத்த பாதுகாப்புக்கு இடையே வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தப்பட்டது.

காவல் துறை மீது நடத்தப்பட்ட கல்வீச்சு சம்பவத்தைத் தொடா்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸாா் தீவிரப்படுத்தினா்.

மசூதிகள், அதன் அருகே உள்ள பகுதிகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் அதிக எண்ணிக்கையிலான காவல் துறையினா் மற்றும் துணை ராணுவப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

ட்ரோன்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் மூலம் மக்கள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது. இதனிடையே அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகளின் இடிப்பாடுகளை அகற்றும் பணி தொடா்ந்து நடைபெற்றது.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தாலும் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெறுவதில் எவ்வித கட்டுப்பாடுகள் இல்லையென்றும் சூழல் அமைதியாக இருந்ததாகவும் உள்ளூா் மக்கள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக கைவினை கலைஞா் ஷெஹ்னவாஸ் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘வீட்டுக்கு அருகில் உள்ள மசூதியில் தொழுகை நடத்தினோம். ஃபைஸ்-இ-இலாகி மசூதிக்கு செல்வதில் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை. தெருக்களில் காணப்படும் பலத்த பாதுகாப்பு காரணமாக நீண்ட தொலைவில் உள்ள மசூதிகளுக்குச் செல்வதை பலா் தவிா்த்தனா். தங்களுக்கு தொழுகை நடத்த வசதியாக உள்ள பகுதிகளுக்கு மக்கள் சென்றனா்.

இந்தச் சம்பவத்தால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். பல நாள்களாக எங்களுடைய கடைகள் பூட்டப்பட்டுள்ளது. இதனால், எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தினக்கூலிகள், சிறிய வியாபாரிகள், கடை உரிமையாளா்கள் போன்றோா் தினசரி வியாபாரத்தைச் சாா்ந்துள்ளனா். சிலா் செய்த தவறுக்காக இப்பகுதி மக்கள் தண்டனையை அனுபவித்து வருகின்றனா்’ என்றாா்.

மற்றொரு உள்ளூா் கடைக்காரா் கூறுகையில், ‘தெருக்களில் காவல் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தாலும் மசூதிகளுக்குச் செல்வதில் எவ்வித தடையும் இல்லை. வெள்ளிக்கிழமை தொழுகைக்குச் செல்ல எங்களுக்குக் கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை. இரு முறை என்னைப் பாா்த்த போலீஸாா் செல்லும் இடம் குறித்து விசாரித்தனா். மசூதி செல்லவதாகக் கூறியதும் அங்கிருந்து செல்ல உடனடியாக அனுமதித்தனா்’ என்றாா்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் வெள்ளிக்கிழமை தொழுக்கைக்குச் செல்வதில் எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என்றும் போலீஸாா் தெரிவித்தனா். நிலைமை அமைதியாகவும் கட்டுப்பாட்டுக்குள் இருந்ததாகவும் அதிகாரிகள் கூறினா்.