உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை கேரளம் செல்கிறார்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை கேரளத்துக்குச் செல்வது குறித்து...

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா - (கோப்புப் படம்)

Published On :

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை (ஜன. 11) கேரள மாநிலத்துக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் நடைபெறவுள்ள ஏராளமான நிகழ்ச்சிகள் மற்றும் பாஜக நிர்வாகிகளைச் சந்திக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை திருவனந்தபுரம் செல்வதாக, பாஜக மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தின் உள்ளாட்சித் தேர்தல்களில் பாஜக முதல்முறையாக மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்தப் பயணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாநகராட்சி உறுப்பினர்களை அமித் ஷா நேரில் சந்தித்து உரையாடுவார் எனக் கூறப்பட்டுள்ளது.

இத்துடன், ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலில் அமித் ஷா தரிசனம் நாளை காலை தரிசனம் செய்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மதியம் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்களை அமித் ஷா சந்திப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே, திருவனந்தபுரத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி விரைவில் வருகைத் தருவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இந்தப் பயணம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

It has been reported that Union Home Minister Amit Shah will be visiting Kerala tomorrow (Jan. 11).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.