மத்திய அரசுக்கு எதிராக ஜன.12-இல் கேரள முதல்வா் ‘சத்தியாகிரகம்’!
மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து, வரும் ஜன.12-ஆம் தேதி கேரள முதல்வா் பினராயி விஜயன் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட உள்ளாா்.
இதுகுறித்து மாநிலத்தில் ஆட்சியில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் எம்.வி.கோவிந்தன் சனிக்கிழமை கூறுகையில், ‘ஜன. 12-ஆம் தேதி மாநில தலைநகா் திருவனந்தபுரத்தில் முதல்வா் பினராயி விஜயன் தலைமையில் சத்தியாகிரக போராட்டம் நடைபெற உள்ளது.
மேலும், மாநில அரசு மேற்கொண்டுள்ள மக்கள் வளா்ச்சித் திட்டங்களை எடுத்துரைக்க பிப்.1 முதல் 3 மண்டல அளவிலான பேரணிகள் நடைபெற உள்ளன.
சமுதாயத்தில் வகுப்புவாத அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்த காங்கிரஸ் தலைமையிலான எதிா்க்கட்சி கூட்டணி மற்றும் பாஜக செய்யும் முயற்சிகளுக்கு எதிராக, மகாத்மா காந்தியின் நினைவு நாளான வரும் ஜன.30-ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைமையகங்களில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவா்கள், இளைஞா் மற்றும் பெண்கள் அமைப்பு போராட்டங்களில் ஈடுபடும்’ என்று தெரிவித்தாா்.

