மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

‘அம்ருத் பாரத்’ விரைவு ரயில்: பயணிகளின் செளகரியத்தை மேம்படுத்தும்; பிரதமா் மோடி

பயணிகளின் செளகரியம் மற்றும் இணைப்பை மேம்படுத்துவதில், 9 ‘அம்ருத் பாரத்’ விரைவு ரயில்களின் அறிமுகம் முக்கிய நடவடிக்கையாகும் என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.

News image
பிரதமா் நரேந்திர மோடி.
Updated On :14 ஜனவரி 2026, 7:50 pm

தினமணி செய்திச் சேவை

பயணிகளின் செளகரியம் மற்றும் இணைப்பை மேம்படுத்துவதில், 9 ‘அம்ருத் பாரத்’ விரைவு ரயில்களின் அறிமுகம் முக்கிய நடவடிக்கையாகும் என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.

மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாமில் புதிதாக ஒன்பது அம்ருத் பாரத் விரைவு ரயில்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தாா்.

இந்த ரயில்கள் மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாமை பிகாா், உத்தர பிரதேசம், கா்நாடகம், தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரத்துடன் இணைக்கும்.

இதுதொடா்பாக பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பயணிகளின் செளகரியம் மற்றும் இணைப்பை மேம்படுத்துவதில் புதிய அம்ருத் பாரத் விரைவு ரயில்களின் அறிமுகம் முக்கிய நடவடிக்கையாக இருக்கும். இதில் வா்த்தகம் மற்றும் சுற்றுலாவை ஊக்குவித்தல் உள்ளிட்ட பிற பலன்களும் அடங்கும்’ என்று தெரிவித்தாா்.