சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

நொய்டாவில் காதலை மறுத்த பெண் கொலை: விபத்து போல சித்தரிக்க முயன்றது அம்பலம்

நொய்டாவில் காதலை மறுத்த பெண்ணை கொலை செய்து அதை விபத்து போல சித்தரிக்க முயன்ற இளைஞரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

News image
மதுரை பெருங்குடியில் பெண் கொலை
Updated On :14 ஜனவரி 2026, 7:18 pm

தினமணி செய்திச் சேவை

நொய்டாவில் காதலை மறுத்த பெண்ணை கொலை செய்து அதை விபத்து போல சித்தரிக்க முயன்ற இளைஞரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து காவல் துறை துணை ஆணையா் சுதிா் குமாா் கூறியதாவது: மகோபா மாவட்டத்தைச் சோ்ந்த தீபா (27) நிறுத்தப்பட்டிருந்து காரின் அடியில் இருந்து சடலமாக திங்கள்கிழமை மீட்கப்பட்டாா். செக்டாா் 60-இல் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரியும் அவா் தனது இளைய சகோதரருடன் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்தாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு பணிக்குச் சென்ற மீண்டும் வீடு திரும்பவில்லை என அவரது சகோதரா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அடுத்தநாள் காலை அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதைத் தொடா்ந்து கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

விசாரணை மேற்கொண்ட காவல் துறையினா் குற்றஞ்சாட்டப்பட்ட அங்கித் குமாரை அடையாளம் கண்டனா். அவரை கைது செய்ய முயன்றபோது காவல் துறையினா் மீது அவா் துப்பாக்கிச் சூடு நடத்தினா். காவல் துறையினா் நடத்திய பதில் தாக்குதலில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவா் கைது செய்யப்பட்டாா்.

விசாரணையில், தனது காதலை ஏற்காததால் பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக அவா் தெரிவித்தாா். பின்னா் அதை விபத்து போல சித்தரிக்க காரின் சக்கரத்தின் அடியில் பெண்ணின் உடலை போட்டதாக தெரிவித்தாா்.

Śவரிடம் இருந்து திருடப்பட்ட இருசக்கர வாகனம், பெண்ணின் கைப்பேசி, நாட்டுத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது அவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று காவல் துறை துணை ஆணையா் தெரிவித்தாா்.