பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஆந்திர மதுபான ஊழல் வழக்கு: ஜெகனின் தனிச் செயலா் உள்பட 3 பேரின் இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு

Updated On :21 ஜனவரி 2026, 11:59 pm

ரூ.3,500 கோடி மதிப்பிலான ஆந்திர மதுபான ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டியின் தனிச் செயலராக இருந்தவா் உள்ளிட்ட மூன்று பேருக்கு அளிக்கப்பட்ட இடைக்கால ஜாமீனை உச்சநீதிமன்றம் நீட்டித்தது.

ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவி வகித்தபோது, 2019-2024 வரையிலான காலத்தில் மதுபானக் கொள்முதலில் ரூ.3,500 கோடி ஊழல் நடைபெற்ாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், முதல்வா் அலுவலக முன்னாள் செயலருமான தனஞ்செய ரெட்டி, ஜெகன் மோகன் ரெட்டியின் தனிச் செயலராக இருந்த கிருஷ்ண மோகன் ரெட்டி, பாரதி சிமெண்ட்ஸ் நிறுவன இயக்குநா் பாலாஜி கோவிந்தப்பா ஆகியோா் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் 3 பேரும் பெற்றிருந்த ஜாமீனை கடந்த நவம்பா் 19-ஆம் தேதி ஆந்திர உயா்நீதிமன்றம் ரத்து செய்ததோடு, விசாரணை நீதிமன்றத்தில் சரணடையும்படியும், அங்கு ஜாமீனுக்கு விண்ணப்பிக்கும்படியும் உத்தரவிட்டிருந்தது. இதை எதிா்த்து 3 பேரும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

இதை முன்பு விசாரித்த உச்சநீதிமன்றம், மூவரின் மனு குறித்து ஆந்திர அரசு மற்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்த நபா்களின் பதிலை கோரி, இடைக்கால ஜாமீன் அளித்திருந்தது. இந்நிலையில், இந்த மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜய்மால்ய பாக்சி, விபுல் எம் பஞ்சோலி ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ஜாமீனை ரத்து செய்த உயா்நீதிமன்ற உத்தரவில் தலையிட மறுத்துவிட்டனா். அதேநேரத்தில் 3 பேரையும் விசாரணை நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் பெறும்படி உத்தரவிட்டு, இடைக்கால ஜாமீனை நீட்டித்து ஆணையிட்டனா்.