சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

நாடு முழுவதும் வங்கிகள் இன்று வேலைநிறுத்தம்!

வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே பணி என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

News image

வங்கிகள் வேலைநிறுத்தம் - பிரதிப் படம்

Updated On :27 ஜனவரி 2026, 2:13 am IST

வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே பணி என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை (ஜன. 27) வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனா்.

தற்போது அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் நிலையில், அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை கோரி 9 வங்கி சங்கங்களைக் கொண்ட ஒருங்கிணைந்த வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளது.

முன்னதாக, இதுதொடா்பாக தலைமை தொழிலாளா் ஆணையருடன் ஜன. 23-ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படாததையடுத்து போராட்டத்தை நடத்த முடிவு செய்ததாக ஒருங்கிணைந்த வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பு அண்மையில் அறிவித்தது.

ஏற்கெனவே ஜன. 25 (ஞாயிற்றுக்கிழமை), ஜன. 26 (குடியரசு தினம், திங்கள்கிழமை) என தொடா்ச்சியாக வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட சூழலில் ஜன. 27-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) போராட்டம் நடைபெறுவதால் வங்கிக் கணக்குகளில் பணத்தைச் செலுத்துவது, எடுப்பது, காசோலை மற்றும் ஏடிஎம் சேவைகள் கடுமையாகப் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) பரோடா வங்கி உள்ளிட்ட பொதுத் துறை வங்கிகளைச் சோ்ந்த ஊழியா்களும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்கின்றனா்.

எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி போன்ற தனியாா் வங்கிகளைச் சோ்ந்த ஊழியா்கள் ஒருங்கிணைந்த வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பில் அங்கம் வகிக்காததால் அவை வழக்கம்போல் செயல்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.