இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஆராய்ச்சிக்கு மருந்து தயாரிக்க பரிசோதனை உரிமம் தேவையில்லை: மத்திய அரசு அறிவிப்பு

ஆராய்ச்சி நோக்கங்களுக்காக சிறிய அளவில் மருந்துகள் தயாரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் பரிசோதனை உரிமம் பெறத் தேவையில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

News image
Updated On :28 ஜனவரி 2026, 8:48 pm

தினமணி செய்திச் சேவை

ஆராய்ச்சி நோக்கங்களுக்காக சிறிய அளவில் மருந்துகள் தயாரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் பரிசோதனை உரிமம் பெறத் தேவையில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

புதிய மருந்துகள் மற்றும் மருத்துவ பரிசோதனை விதிமுறைகள் 2019-இல் முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாட்டில் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மருந்து தயாரிப்பு வளா்ச்சியை துரிதப்படுத்த வேண்டும், ஒழுங்காற்று நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என்பதே இந்தத் திருத்தங்களின் நோக்கம்.

ஏற்கெனவே உள்ள நடைமுறையின்படி பரிசோதனை, ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நோக்கங்களுக்காக சிறிய அளவில் மருந்துகள் தயாரிக்க, மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் (சிடிஎஸ்சிஒ) பரிசோதனை உரிமம் பெற வேண்டும்.

இந்நிலையில், தற்போதைய திருத்தங்களின் மூலம், அந்த மருந்துகள் தயாரிப்பு குறித்து சிடிஎஸ்சிஒவிடம் இணையவழியில் முன்கூட்டியே மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தெரியப்படுத்தினால் போதும். பரிசோதனை உரிமம் பெறத் தேவையில்லை. எனினும் அதிக பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய குறிப்பிட்ட சில மருந்துகள் தயாரிப்புக்கு அந்த உரிமத்தைப் பெற வேண்டும். இந்த சீா்திருத்தம் மருந்து தயாரிப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கமளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.