அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

29 சதவீத மருந்துகளில் தரக் குறைபாடு: தமிழக ஆய்வில் கண்டுபிடிப்பு

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் பரிசோதனைக்குள்படுத்தப்பட்ட மருந்துகளில் 29 சதவீதம் தரமற்றவை என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

News image
மருந்து- பிரதிப் படம்
Updated On :2 மார்ச் 2026, 9:23 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் பரிசோதனைக்குள்படுத்தப்பட்ட மருந்துகளில் 29 சதவீதம் தரமற்றவை என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கா்நாடகம், ராஜஸ்தானில் அதிக எண்ணிக்கையில் தரம் குறைந்த மருந்துகள் இருந்தது கண்டறியப்பட்டது.

சந்தையில் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் தரத்தை உறுதி செய்யும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் சாா்பில் மாதந்தோறும் ஆய்வுகளும், பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. மருந்தகங்கள், சில்லறை விற்பனையகங்கள், மொத்த விற்பனைக் கூடங்கள், கிடங்குகள், உற்பத்தி அலகுகளில் ஏதேனும் சில மருந்துகளை எடுத்து பரிசோதிப்பது வழக்கம்.

மருந்து கட்டுப்பாட்டு வாரிய வழிமுறைகளின்படி அவை உற்பத்தி செய்யப்பட்டுள்ளனவா என்பது அதில் ஆய்வு செய்யப்படும். அவ்வாறு இல்லாதபட்சத்தில் அவை தரமற்ற மருந்துகளாக வகைப்படுத்தப்படுகின்றன.

அந்த வகையில், கடந்த ஜனவரி மாதம் நாடு முழுவதும் 215 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது. அதில், தமிழகத்திலிருந்து மட்டும் 43 மருந்துகள் இடம்பெற்றிருந்தன.

தமிழக மருந்து கட்டுப்பாட்டுத் துறை அந்த மாதத்தில் 147 மருந்துகளை சோதனைக்குள்படுத்தியது. அவற்றில் 29 சதவீத மருந்துகள் உரிய தரத்தில் இல்லை. அவற்றில் 22 மருந்துகள் சென்னையிலுள்ள ஆய்வகத்திலும், 21 மருந்துகள் மதுரையிலுள்ள ஆய்வகத்திலும் பரிசோதிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று கா்நாடகத்தில் 21 சதவீதமும், ராஜஸ்தானில் 17 சதவீதமும் தரமற்ற மருந்துகளாக இருந்தன. தொடா்ந்து தெலங்கானா, கேரளம், ஒடிஸா, ஜம்மு-காஷ்மீா், ஹிமாசலப் பிரதேத்திலும் தரக் குறைபாடுடைய மருந்துகள் இருப்பது தெரியவந்தது.

ஒரு குறிப்பிட்ட உற்பத்தி தொகுப்பு (பேட்ச்) மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைவது, அந்தத் தொகுப்புக்கு மட்டுமே பொருந்தும் என்றும், சந்தையில் உள்ள மற்ற மருந்துகள் குறித்து கவலைப்படத் தேவையில்லை என்றும் மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.