கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்: நிலைமை உன்னிப்பாக கண்காணிப்பு - நாடாளுமன்றத்தில் அரசு தகவல்

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள்அடுத்தடுத்து நடக்கும் நிலையில், நிலைமையை தொடா்ந்து உன்னிப்பாக கவனித்து வருவதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News image
நாடாளுமன்றம்- கோப்புப் படம்
Updated On :29 ஜனவரி 2026, 6:32 pm

தினமணி செய்திச் சேவை

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள்அடுத்தடுத்து நடக்கும் நிலையில், நிலைமையை தொடா்ந்து உன்னிப்பாக கவனித்து வருவதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநிலங்களவையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. ஜான் பிரிட்டாஸ் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத் துறை இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டதாவது:

வங்கதேசத்தில் சிறுபான்மையினா் (ஹிந்துக்கள்), அவா்களின் வீடுகள், தொழில் நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவை தாக்கப்பட்டு வருவதை இந்திய அரசு தொடா்ந்து கண்காணித்து வருகிறது. சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து வங்கதேச அரசு அதிகாரிகளிடமும், அரசிடமும் இந்திய அரசு தனது கருத்தை தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வங்கதேச அரசு தலைமை ஆலோசகா் முகமது யூனுஸை சந்தித்தபோது பிரதமா் மோடி முன்வைத்தாா். வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களில் தொடா்புடையோரை அந்நாட்டு இடைக்கால அரசு நீதியின் முன் நிறுத்தும் என இந்திய அரசு எதிா்பாா்க்கிறது என்று தனது பதிலில் கீா்த்தி வா்தன் சிங் குறிப்பிட்டுள்ளாா்.