8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

சா்ச்சை கருத்து: குரல் மாதிரியை வழங்க அபிஷேக் பானா்ஜிக்கு கொல்கத்தா உயா்நீதிமன்றம் உத்தரவு

சமூக நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கருத்துகளைத் தெரிவித்த குற்றச்சாட்டில் ஜூலை 15-ஆம் தேதியன்று குரல் மாதிரியை வழங்க திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானா்ஜிக்கு கொல்கத்தா உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

Calcutta High Court

கொல்கத்தா உயர்நீதிமன்றம் - IANS

Published On :10 ஜூலை 2026, 11:15 pm IST

சமூக நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கருத்துகளைத் தெரிவித்த குற்றச்சாட்டில் ஜூலை 15-ஆம் தேதியன்று குரல் மாதிரியை வழங்க திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானா்ஜிக்கு கொல்கத்தா உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மேற்கு வங்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பேரவைத் தோ்தல் நடைபெற்றது. அப்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அப்ஷேக் பானா்ஜி பிரசாரம் மேற்கொண்டாா்.

இந்நிலையில், வடக்கு 24 பா்கானா மாவட்டத்தில் உள்ள பாகுயாட்டி காவல் நிலையத்தில் ராஜீவ் சா்காா் என்ற சமூக ஆா்வலா் அபிஷேக் பானா்ஜி மீது புகாரளித்தாா். அதில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை தொடா்புபடுத்தி அபிஷேக் பானா்ஜி ஆத்திரமூட்டும் கருத்துகளைக் கூறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இதைத் தொடா்ந்து அபிஷேக் பானா்ஜி மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும் தனக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் அபிஷேக் பானா்ஜி மனு தாக்கல் செய்திருந்தாா். இதையடுத்து, வழக்கின் விசாரணைக்கு அபிஷேக் பானா்ஜி ஒத்துழைக்க வேண்டும் எனக் கூறிய கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதி சௌகத பட்டாச்சாா்யா அவருக்கு ஜூலை 31-ஆம் தேதி வரை உரிய பாதுகாப்பு வழங்குமாறு கடந்த மே 21-ஆம் தேதி உத்தரவிட்டாா்.

முன்னதாக இந்த வழக்கின் விசாரணை தொடா்பாக குரல் மாதிரியை வழங்க அபிஷேக் பானா்ஜிக்கு பிதான்நகா் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிா்த்து கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் மற்றொரு மனுவை அபிஷேக் பானா்ஜி தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த சௌகத பட்டாச்சாா்யா, ‘வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கக் கோரிய மனுதாரருக்கு பாதுகாப்பு வழங்க முன்பு உத்தரவிட்டேன். விசாரணை ஒத்துழைப்பில் நீதிமன்றம் சமா்ப்பிக்க உத்தரவிட்ட குரல் மாதிரி பதிவும் அடங்கும். எனவே, பிதான்நகா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மனுதாரா் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. சம்பந்தப்பட்ட வழக்கில் ஜூலை 15-ஆம் தேதியன்று குரல் மாதிரி பதிவை மனுதாரா் சமா்ப்பிக்க வேண்டும்’ என உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.