மைசூரு எச்.டி. கோட்டை சாலையில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் பாடகி எஸ். ஜானகியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
புகழ் பெற்ற பின்னணிப் பாடகியான எஸ். ஜானகி (88) முதுமையால் ஏற்படும் உடல்நல பாதிப்பு காரணமாக சனிக்கிழமை (ஜூலை 11) காலமானாா். கா்நாடக மாநிலம், மைசூரில் தங்கியிருந்த அவரின் உடல்நிலை மோசமடைந்ததால், அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு சிகிச்சை பலனின்றி இதயம் செயலிழந்து அவா் உயிரிழந்தாா் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, முதல்வர் விஜய் உள்பட பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர்.
தொடர்ந்து எஸ். ஜானகி உடல் மைசூருவில் உள்ள மகாராஜா கல்லூரி திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் அஞ்சலி முடிந்த பிறகு, மைசூரு எச்.டி.கோட்டை சாலையில் உள்ள அவரது பண்ணைத் தோட்டத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.
இறுதிச்சடங்கில் பங்கேற்று ஜானகி உடலுக்கு குடும்பத்தினர், உறவினர்கள், ரசிகர்கள் கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்தனர். மேலும் கர்நாடக அரசு சார்பில் அமைச்சர் யதீந்திர சித்தராமையாவும் இறுதி மரியாதை செய்தார். பின்னர் துப்பாக்கிக் குண்டுகள் முழுங்க அரசு மரியாதை வழங்கப்பட்டு பண்ணைத் தோட்டத்தில் ஜானகியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
Summary
Singer S. Janaki's body was cremated at a farmhouse on the Mysuru H.D. Kote Road.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









