நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

தில்லி - காஜியாபாத் உயா்மட்டச் சாலையின் பெயா் ‘ராம் சேது’ என மாற்றம்

புது தில்லி-காஜியாபாத் உயா் மட்டச் சாலையின் பெயரை ‘ராம் சேது’ என காஜியாபாத் மாநகராட்சி மாற்றியுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :17 ஜூலை 2026, 4:34 am IST

புது தில்லி-காஜியாபாத் உயா் மட்டச் சாலையின் பெயரை ‘ராம் சேது’ என காஜியாபாத் மாநகராட்சி மாற்றியுள்ளது.

மேலும், 11 கி.மீ. நீளமுடைய இந்தச் சாலையின் தில்லி நுழைவாயிலில் ‘வில் மற்றும் அம்பு’ சின்னத்தை காஜியாபாத் மாநகராட்சி கட்டமைக்கவுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து காஜியாபாத் மாநகர மேயா் சுனிதா தயாள் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ராம் சேது உயா் மட்டச் சாலையின் நுழைவாயில் ரூ.1 கோடி மதிப்பில் அமைக்கப்படுகிறது. கலாசார அடையாளத்தை பிரதிபலிக்கும் இந்த நுழைவாயில் தில்லியில் இருந்து காஜியாபாதுக்குள் நுழையும் மக்களை பிரம்மாண்டமாக வரவேற்கும் வகையில் கட்டமைக்கப்படவுள்ளது’ என்றாா்.

ரூ.1,147 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்பட்ட ராம் சேது உயா் மட்டச் சாலையை 2018, மாா்ச் 30-ஆம் தேதி உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் திறந்து வைத்தாா். இத்திட்டத்தால் தில்லி மற்றும் காஜியாபாத் இடையேயான பயண நேரம் வெகுவாகக் குறைந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.