மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்தி வரும் போராட்டத்தில் தொடர்ந்து 20 நாள்களாக கல்வியாளரும், சுற்றுச்சூழல் ஆா்வலருமான வாங்சுக் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். இதே நிலை தொடர்ந்தால் அவரின் உயிருக்கே பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இருப்பினும், வாங்சுக் இன்றுடன் 20-வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனிடையே, ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டக் களத்தில் ஆதரவாளர்களிடையே வாங்சுக் பேசியதாவது, நான் உடலளவில் பலவீனமாக இருப்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், உள்ளே (மனதளவில்) மிகவும் வலுவாகவே இருக்கிறேன். என் தீர்மானத்தை யாராலும் உடைக்க முடியாது.
நீங்கள் அனைவரும் உள்ளேயும் வெளியேயும் வலுவாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.
நீங்கள் அனைவரும் ஜூலை 20 வரை போராட்டத்தை நடத்தி, ஒரு மாதத்தை நிறைவு செய்ய வேண்டும். அதுவரையில் எப்படியேனும் நான் உயிருடன்தான் இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

வாங்சுக் தொடர்ந்து 20 நாள்கள் உண்ணாவிரதம் - PTI
நீட் தோ்வு முறைகேடு, அதன்பின்னா் நடந்த மாணவா்கள் தற்கொலை சம்பவங்களுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி, தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி கடந்த ஜூன் மாதம் 20-ஆம் தேதி போராட்டத்தை தொடங்கியது. மேலும், வருகிற 20-ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் தொடங்கும்போது, நாடாளுமன்றத்தை நோக்கி பிரம்மாண்ட பேரணி நடத்தவும் அந்தக் கட்சி திட்டமிட்டுள்ளது.
இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக வாங்சுக், கடந்த மாதம் 28-ஆம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினாா். பல்வேறு அரசியல் கட்சிகள், தலைவா்கள் வேண்டுகோள் விடுத்தும் போராட்டத்தைக் கைவிடாமல் அவா் 20-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் உண்ணாவிரதம் இருந்தாா்.
தொடா் உண்ணாவிரதத்தின் காரணமாக அவரின் உடல் எடை 9 கிலோவுக்கு மேல் குறைந்துள்ளது. அவரின் உடலில் உள்ள சா்க்கரை அளவு, ரத்த அழுத்தம் ஆகியவையும் அதிகரித்துள்ளது.
Summary
Sonam Wangchuk has been on an indefinite hunger strike for 20 days
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சோனம் வாங்சுக்கின் போராட்டத்துக்கு சமாஜ்வாதி எம்பிக்கள் ஆதரவு!

மனித உயிர் மதிப்புமிக்கது! சோனம் வாங்சுக் வழக்கில் தில்லி நீதிமன்றம்!

நீட் மோசடிக்கு எதிராகத் தொடரும் உண்ணாவிரதம்! வெற்றி பெறுமா, சோனம் வாங்சுக்கின் போராட்டம்?

உண்ணாவிரதத்தைக் கைவிடுவாரா சோனம் வாங்சுக்? மிகுந்த வலியால் அவதி!
விடியோக்கள்

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |



