பிஃபா 2026: ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி ஸ்பெயின் 2-வது முறை சாம்பியன்!ரோஹித் சர்மா சதம் வீண்! இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்தது இந்தியா!திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

அயோத்தி: ஆற்றில் படகில் அமர்ந்து அசைவம் சாப்பிட்ட 3 பேர் கைது

அயோத்தியில் ஆற்றில் படகில் அமர்ந்து அசைவம் சாப்பிட்டவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை... .

News image

கைது

Updated On :19 ஜூலை 2026, 4:10 pm IST

அயோத்தியில் ஆற்றில் படகில் அமர்ந்து அசைவம் சாப்பிட்டதாக 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம், குப்தார் காட் பகுதியில் சரயு ஆற்றில் படகு ஒன்றில் நான்கு பேர் அசைவ உணவு மற்றும் மது அருந்தும் காட்சிகள் அடங்கிய காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து அவர்களிம் 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து நகரப் பிரிவு காவல் அதிகாரி ஷ்ரியாஷ் திரிபாதி ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், " அந்தக் காணொளியில் நான்கு இளைஞர்கள் ஆட்டிறைச்சி சாப்பிடுவதும் மது அருந்துவதும் பதிவாகியிருந்தது. அவர்களில் 3 பேரை நாங்கள் கைது செய்துள்ளோம். ஒருவர் தலைமறைவாக உள்ளார்," என்று தெரிவித்தார்.

கைதானவர்கள் லவ்குஷ் நிஷாத், ஜிதேந்திர நிஷாத் மற்றும் ராஜ்குமார் நிஷாத் ஆகியோர் என்றும் புனிதமாகக் கருதப்படும் அந்த ஆற்றின் மீதான பக்தர்களின் நம்பிக்கைக்கு அவர்கள் களங்கம் விளைவித்துள்ளனர் என்றும் போலீஸ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

முன்னதாக ஜூன் மாதத்தில், வாரணாசியில் கங்கை ஆற்றில் படகில் கோழி இறைச்சி சமைத்து பீர் அருந்தியதாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களது படகும் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Police here have arrested three men for eating mutton and drinking alcohol on the Saryu River, an officer said on Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.