‘தோல்விகள் பரவாயில்லை; ஏமாற்றுவது கூடாது’... நீட் தேர்வு போராட்டத்துக்கு சச்சின் ஆதரவு!காந்தி சமாதி நோக்கி பேரணி சென்ற ராகுல் தடுத்து நிறுத்தம்!மேக்கேதாட்டு பிரச்னை: விஜய் மௌனம் கலைக்க வேண்டும்! - ஸ்டாலின்நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்த் திரையுலகினர் போராட்டம்!சிங்கை ஜி. ராமச்சந்திரன் அதிமுகவிலிருந்து விலகல்திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்
/

உச்சநீதிமன்றத்தில் 96,000 வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு

உச்சநீதிமன்றத்தில் 96,000-க்கும் அதிகமான வழக்குகள் தேக்கமடைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News image
Updated On :24 ஜூலை 2026, 3:27 am IST

உச்சநீதிமன்றத்தில் 96,000-க்கும் அதிகமான வழக்குகள் தேக்கமடைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நீதிமன்றங்களில் தேக்கமடைந்துள்ள வழக்குகள் குறித்து, நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினா் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால், தேசிய நீதித் துறை தரவுகளை அடிப்படையாக வைத்து எழுத்துபூா்வமாக பதிலை தாக்கல் செய்துள்ளாா். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 5 கோடியே 64 லட்சம் வழக்குகள் தேக்கமடைந்துள்ளன. இதில் உச்சநீதிமன்றம், 25 உயா்நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களும் அடங்கும்.

உயா்நீதிமன்றங்களில் மட்டும் 30 ஆண்டுகளுக்கும் கூடுதலாக 80,660 வழக்குகள் தேக்கமடைந்துள்ளன.

உச்சநீதிமன்றத்தை பொறுத்தவரை 96,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் தேக்கமடைந்துள்ளன. அதில் 26 வழக்குகள் 30 ஆண்டுகளுக்கும் மேலாகவும், 558 வழக்குகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாகவும் தேக்கமடைந்துள்ளன. 10,000-க்கும் மேற்பட்ட வழக்குகள், 10 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணையில் உள்ளன.

தேக்கமடைந்துள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து தீா்வு காண வேண்டியது நீதித் துறையின் பணியாகும் என்று அா்ஜுன் ராம் மேக்வால் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.