திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்தூத்துக்குடியில் காவல் மரணம்? காவல்துறை விளக்கம்!காரணம் கூறாமல் 3 மாதம் சிறை! தில்லியில் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்! காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை!தர்மேந்திர பிரதான் ராஜிநாமா வரை நாடாளுமன்றம் முடங்கும்! கார்கே திட்டவட்டம்50 ஆண்டுகள்! எம்ஜிஆருக்குப் பிறகு திரையரங்குகளில் ஹீரோவாக முதல்வர் விஜய்!தீவிரமடையும் போராட்டம்! மெரீனா மூடல்; மக்களுக்கு தடை!நீட் தேர்வை எதிர்த்து நாடாளுமன்றத்தில் திமுக தனியாகப் போராட்டம்! நாடாளுமன்றத்தில் இந்தியா - பாஜக கூட்டணிகள் எதிரெதிரே போராட்டம்!தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மாணவர் கோரிக்கை நியாயமனது! - ராகுல் காந்திவிஜய் மீண்டும் படத்தில் நடிக்க வேண்டும் என ஆசை! அமைச்சர் வினோத்நீட் வழக்குகளை உடனடியாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்! பிரதமர் மோடி
/

சிஜேபி போராட்டத்திற்கு ஆதரவு: அன்னா ஹசாரே மௌனப் போராட்டம்!

சிஜேபி போரட்டத்துக்கு ஆதரவாக களமிறங்கும் அன்னா ஹசாரே பற்றி..

News image

அன்னா ஹசாரே மௌனப் போராட்டம் - X

Updated On :23 ஜூலை 2026, 2:59 pm IST

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மகாராஷ்டிரத்தின் அஹில்யாநகரில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இரண்டு மணி நேர மௌனப் போராட்டத்தை மேற்கொண்டார்.

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தனது போராட்டத்தைக் காலை 11 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1 மணிக்கு நிறைவு செய்ததாக சமூக ஆர்வலரின் உதவியாளர் தத்தா அவாரி பிடிஐயிடம் தெரிவித்தார்.

அஹில்யாநகரில் உள்ள மகாத்மிக காந்தி சிலைக்கு அருகே இந்தப் போராட்டத்தை நடத்திய ஹசாரே, பின்னர் அதே மாவட்டத்தில் உள்ள தனது கிராமமான ரலேகன் சித்திக்குத் திரும்பினார்.

அன்னா ஹசாரே பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில்,

வன்முறை மற்றும் காவல்துறை நடவடிக்கை செய்திகள் மிகுந்த வேதனையை அளிக்கின்றன. போராட்டக்காரர்களின் அதிருப்தியைச் சட்டம் ஒழுங்குப் பிரச்னையாகப் பார்க்காமல், சமூகத்தின் வேதனையாகவும், எதிர்பார்ப்புகளாகவும் பார்க்க வேண்டும்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரப்பட்டால், அது அரசைக் கவிழ்க்காது. மாறாக அதன் செயல்பாட்டை மேலும் பொறுப்புணர்வு மிக்கதாகவும், திறமையானதாகவும் மாற்றும்.

போராடுபவர்களின் கருத்துக்களைப் பொறுமையுடன் கேட்கவும், நம்பிக்கையான சூழலை உருவாக்கவும், ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகளைக் காணவும் என மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கடிதத்தில் எழுதியிருந்தார்.

Social activist Anna Hazare on Thursday observed a two-hour-long maun andolan (silent protest) at Ahilyanagar in Maharashtra to extend his support for protesting students in Delhi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.