இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

தமிழ்நாடு திரும்பாத அண்ணாமலை! தில்லியில் என்ன நடக்கிறது?

பாஜக மேலிட முடிவுக்காக தில்லியில் அண்ணாமலை காத்திருப்பது பற்றி...

News image

அமித் ஷாவுக்கு புத்தகம் பரிசளித்த அண்ணாமலை - ஏஎன்ஐ

Updated On :3 ஜூன் 2026, 10:54 am IST

தில்லி பயணம் மேற்கொண்ட அண்ணாமலை பாஜக தலைவர்களை நேற்று சந்தித்துப் பேசிய நிலையில், மீண்டும் சென்னை திரும்பாமல் அங்கேயே தங்கியுள்ளார்.

தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளுடன் அண்ணாமலைக்கு கருத்து வேறுபாடு இருந்த நிலையில், மக்கள் சக்தி இயக்கம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை அவர் தொடங்கவுள்ளதாக கடந்த ஒரு வாரமாக தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்த நிலையில், சென்னையில் கடந்த திங்கள்கிழமை மாலை தில்லி புறப்பட்டுச் சென்ற அண்ணாமலை, நேற்று கட்சியின் தேசிய தலைவர் நிதின் நவீன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார்.

இந்த சந்திப்பின்போது, நிதின் நவீனிடம் பாஜகவில் இருந்து விலகுவதாக தனது ராஜிநாமா கடிதத்தை அண்ணாமலை வழங்கியதாகவும், இதுதொடர்பாக அமித் ஷாவிடம் விளக்கம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோற்றதற்கான காரணம், கட்சியின் தான் ஒதுக்கப்பட்டது உள்ளிட்டவை குறித்து அவர் அறிக்கையாக நிதின் நவீனிடம் சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது.

அண்ணாமலை நாளை (ஜூன் - 4) பிறந்த நாள் கொண்டாடும் நிலையில், அவரது அரசியல் கட்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், கட்சியின் மேலிட வேண்டுகோளை ஏற்று சென்னை திரும்பாமல், இன்னும் தில்லியிலேயே அண்ணாமலை தங்கியுள்ளார்.

பாஜகவின் மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு, திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை குறித்து அன்றாட செய்தியாளர்கள் சந்திப்பு, ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் என தமிழக மக்களிடையே முன்னெப்போதும் இல்லாத வகையில் பாஜகவை கொண்டு சேர்த்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்காக நயினார் நாகேந்திரனை மாநிலத் தலைவராக பாஜக மேலிடம் நியமித்தது.

இத்தகைய சூழலில் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகினால் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று பாஜக மேலிடத் தலைவர்கள் கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், தமிழ்நாடு பாஜக உட்கட்சிப் பூசல் தொடர்பாக ஆலோசிக்க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை பாஜக மேலிடம் உடனடியாக தில்லிக்கு அழைத்திருந்தது.

இன்று தன்னை சந்திக்க வந்த நயினார் நாகேந்திரனிடம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டில் பாஜக ​​கட்சி நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துமாறும், கட்சிப் பணிகளுடன் அண்ணாமலை குறித்தும் கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், அண்ணாமலைக்கு கட்சிக்குள் இனி எந்த வேலையும் இல்லை என்றும் கட்சிதான், மற்ற அனைவரையும் விட பெரியது என்று அமித் ஷா கூறியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Summary

Annamalai Has Not Returned to Tamil Nadu! What Is Happening in Delhi?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.