வெனிசுவேலா நாட்டின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்தடைந்தார்.
வெனிசுவேலா இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அரசு முறைப் பயணமாக புதன்கிழமை (ஜூன் 3) மாலை இந்தியா வந்தடைந்தார். 5 நாள் பயணமாக தலைநகர் தில்லுக்கு வந்த அதிபர் டெல்சி பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார்.
இந்தப் பயணத்தில், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்கும் அதிபர் டெல்சி எரிசக்தி, பாதுகாப்பு, முதலீடு, சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகள் இடையேயான உறவுகள் குறித்த முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இத்துடன், வெனிசுவேலாவின் வெளியுறவு, பொருளாதாரம், நிதி, அறிவியல், தொழில்நுட்பம், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அமைச்சர்களும் அதிபர் டெல்சியுடன் இந்தியா வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ அமெரிக்க படைகளால் நாடுகடத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டார்.
ஏற்கெனவே, 2015, 2019, 2023, 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து இந்திய பயணத்தை மேற்கொண்ட டெல்சி ரோட்ரிக்ஸ் 6 ஆவது முறையாக இன்று இந்தியா வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Venezuela's Acting President Delcy Rodriguez has arrived in India on an official visit.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








