வெனிசுவேலா நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குறைந்தது 164 பேர் பலியானதாக, அந்நாட்டின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அறிவித்துள்ளார்.
வெனிசுவேலாவில், வியாழக்கிழமை (ஜூன் 15) காலை அடுத்தடுத்து 2 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. 7.2 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் பதிவான நிலையில், சில நிமிடங்களில் 7.5 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அண்டை நாடான பிரேசிலின் அமேசான் காடுகள் உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டதாகவும்; இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள கட்டடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இத்துடன், நிலப்பரப்பில் இருந்து 22 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கராகஸ் நகரத்தின் லா குவைரா பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் பகுதியை வெனிசுவேலா அரசு பேரிடர் பாதித்த பகுதியாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், வெனிசுவேலாவில் நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாக அறிவித்த அதிபர் ரோட்ரிக்ஸ், இந்தப் பேரிடரில் சிக்கி குறைந்தது 164 பேர் பலியானதாகவும், 971 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளிலும், கட்டட இடிபாடுகளிலும் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
Summary
Venezuela's acting president, Delcy Rodríguez, has announced that at least 164 people were killed in a powerful earthquake that struck the country.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெனிசுவேலா நிலநடுக்கம்: அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் - பிரதமர் மோடி

கவனம் பெறும் பிரதமர் மோடி - வெனிசுவேலா இடைக்கால அதிபரின் சந்திப்பு!

இந்தியா வந்தார் வெனிசுவேலா இடைக்கால அதிபர்!

வெனிசுவேலா இடைக்கால அதிபர் நாளை இந்தியா வருகிறார்! பிரதமர் மோடியுடன் சந்திப்பு!
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani




