நீட்-2026 மறுதேர்வு வினாக்கள் கசிந்தனவா? சைபர் கிரைம் விசாரணைக்கு என்டிஏ உத்தரவுதிமுக தோல்விக்கு யார் காரணம்? முன்னாள் அமைச்சர் மூர்த்தி வேதனை!எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் எல் நினோ! ஜூன் - ஆகஸ்ட் வரை வெய்யில்தான்!முதல்வர் விஜய் முன்னிலையில் 3 திட்டங்களுக்கு ஒப்பந்தம் கையொப்பம்!நீதித் துறையில் செய்யறிவு! வரைவு விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்! கல்விதான் ஒளிமயமாக்கும் சக்தி! முதல்வர் விஜய் வாழ்த்து!பிகார் மருத்துவமனையில் தீ விபத்து! 3 நோயாளிகள் பலி!தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு!தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்!
/

நீட் மாணவி தற்கொலை! பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் அடுக்கடுக்கான கேள்விகள்!

நீட் மாணவி தற்கொலை விவகாரத்தில் பிரதமர் மோடிக்கும் மத்திய பாஜக அரசுக்கும் காங்கிரஸ் கேள்வி

News image

பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் அடுக்கடுக்கான கேள்விகள்

Updated On :4 ஜூன் 2026, 2:41 pm IST

நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பிரதமர் மோடிக்கும் மத்திய பாஜக அரசுக்கும் காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தேர்வெழுதிய மாணவி ஒருவர் மன உளைச்சலுக்குள்ளாகி தற்கொலை செய்துகொண்டார். மேலும், தற்கொலைக் கடிதத்தில் அவர் கூறியதாவது, என்னை மன்னித்து விடுங்கள்.. மீண்டும் ஒருமுறை நீட் தேர்வெழுத எனக்கு தைரியமில்லை என்று தெரிவித்திருந்தார்.

மாணவியின் தற்கொலை குறித்து பாஜக அரசுக்கு கேள்வி எழுப்பிய காங்கிரஸ், தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "நீட் வினாத்தாள் கசிந்ததால், 18 வயதேயான ஆகாங்ஷா சதுர்வேதி தற்கொலை செய்து கொண்டார். அவர் ஒரு மருத்துவராகச் சேவையாற்ற விரும்பிய நிலையில், அவரது கனவை வினாத்தாள் கசிவு கலைத்து விட்டது.

வினாத்தாள் கசிவால், மாணவியின் குடும்பம் வாழ்நாள் துன்பத்தை அடைந்துள்ளது. ஆகாங்ஷாவை மருத்துவராக்குவதற்காக, விவசாயியான அவரது தந்தை ரூ. 3 லட்சம் கடன் பெற்றதுடன், சமையல்காரராகவும் பணிபுரிந்து வந்தார். இருந்தபோதிலும், அவர்களிடமிருந்து அவர்களின் மகளை வினாத்தாள் கசிவு பறித்துக் கொண்டது.

நீட் வினாத்தாள் கசிவால் 6 குழந்தைகள் பலியானபோதிலும், இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி வாய் திறக்கவே இல்லை.

இது தற்கொலை அல்ல; ஊழல் நிறைந்த அரசால் நிகழ்த்தப்பட்ட ஒரு கொலை. பிரதமர் மோடியும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானும்தான் இந்தக் கொலைகளுக்குப் பொறுப்பு.

வினாத்தாள் கசிவு குறித்து அரசுக்கு நாடு பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

நீட் வினாத்தாள் கசிவால் இன்னும் எத்தனை அப்பாவிகள் பாதிக்கப்படவிருக்கின்றனர்?

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை பிரதமர் மோடி ஏன் பாதுகாக்கிறார்?

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் எப்போதுதான் தண்டிக்கப்படுவர்?

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எப்போது பதவிலியிருந்து விலக்கப்படுவார்?" என்று கூறியுள்ளனர்.

Summary

NEET Paper Leak: Congress slams PM Modi after aspirant's suicide

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.