எல்பிஜி சமையல் எரிவாயு உருளைகளின் விலை உயர்த்தப்பட்டது தவிர்க்க இயலாதது என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
வீடுகளில் சமையல் பயன்பட்டுக்கான எல்பிஜி சிலிண்டரின் விலை ஜூன் 7 முதல் ரூ. 29 மேலும் உயர்த்தப்பட்டுள்ளதற்கு கண்டனம் வலுக்கிறது. கடந்த 3 மாதங்களில் இரண்டாவது முறையாக எல்பிஜி விலையேற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதைப் பற்றி, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், “எரிவாயு சிலிண்டர் விலையேற்றம் பற்றி நாங்களும் மிகுந்த கவலையும் வருத்தமும் கொள்கிறோம். ஆனால், விமர்சனங்களைச் சுமத்துவதற்கு முன், ஒவ்வொருவரும் ஒட்டுமொத்த உலகிலும் உள்ள நிலவரத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். உலகம் மிகத் தீவிரமான பிரச்சினைகளில் சுழன்று கொண்டிருக்கிறது.
இவ்விவகாரத்தில் சரக்குப் போக்குவரத்து பரவலாக நடைபெறவில்லை. மிக மிகக் குறைவான உற்பத்தி தரப்புகளிடமிருந்தே எல்பிஜி கிடைக்கிறது. இவற்றுக்கான போக்குவரத்துச் செலவும் அதிகம். அடிப்படை விலையும் உயர்ந்துள்ளது. இன்சூரன்ஸ் செலவும் அதிகரித்துள்ளது.
ஆகவே, நாங்களும் சாமானிய மனிதரைப் பற்றி சம அளவுக்கு வருத்தமடைந்திருக்கிறோம். ஆனால், அதேவேளையில், விலையேற்றம் தவிர்க்க இயலாதது” என்றார்.
Summary
LPG price hike inevitable due to global crisis: Union Minister Pralhad Joshi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது







