எல்பிஜி சமையல் எரிவாயு உருளைகளின் விலை உயர்த்தப்பட்டதற்கு தக்க அரசியல் விலை கொடுக்க நேரிடும் என்று மத்திய அரசுக்கு சரத் பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வீடுகளில் சமையல் பயன்பட்டுக்கான எல்பிஜி சிலிண்டரின் விலை ஜூன் 7 முதல் ரூ. 29 மேலும் உயர்த்தப்பட்டுள்ளதற்கு கண்டனம் வலுக்கிறது. கடந்த 3 மாதங்களில் இரண்டாவது முறையாக எல்பிஜி விலையேற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், எல்பிஜி விலை உயர்வைக் கண்டித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (சரத் பவார் அணி) தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் பவார் தெரிவித்திருப்பதாவது: “எல்பிஜி விலை உயர்வு வெறும் இரண்டே ரூபாயில் ஆரம்பித்து, நாள்பட மேலும் அதிகரித்து, இன்று விலை எந்த அளவுக்கு விலை உயர்ந்து சென்றுள்ளது என்பதைப் பார்க்கிறோம். இவையனைத்தும், நிதி நிலை மற்றும் சாமானிய மக்களின் தினசரி வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமது அரசு விலைவாசி உயர்வைக் கட்டுக்குள் வைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி சொல்லியிருந்தார். ஆனால், இப்போது மத்திய அரசின் விலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கையானது என்னவென்று புரிகிறது. விலை ஏற்றி அதிர்ச்சியை படிப்படியாக அளிப்பதே அவர்களது கட்டுப்பாட்டு நடவடிக்கையாகிவிட்டது. இதற்கு பொறுப்பானவர்கள் ஒரு அரசியல் விலையைக் கொடுக்க நேரிடும்” என்றார்.
Summary
LPG price hikes: Govt will pay 'political price', says Sharad Pawar; Cong's Wadettiwar slams BJP
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









