புது தில்லி : 5,000-க்கும் மேற்பட்ட இந்திய சிம் கார்டுகளைப் பயன்படுத்தி இணையவழி மோசடிகள் நடைபெற்ற சைபர் குற்ற வழக்கு விசாரணையை அமலாக்கத்துறை தொடங்கியுள்ளது.
இந்தியாவில் வாங்கப்பட்ட மேற்குறிப்பிட்ட சிம் கார்டுகள் கம்போடியாவில் இருந்து செயல்படும் மலேசியாவைச் சேர்ந்தவொரு மோசடி கும்பலால் இந்தியாவில் பல்வேறு இணையவழி மோசடிக் குற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்டதாம். இந்தியாவிலுள்ள சில முகவர்கள் இந்திய சிம் கார்டுகளை கம்போடியாவில் இயங்கும் கும்பலுக்கு மலேசிய நாட்டவர் ஒருவர் மூலம் அனுப்பி வைத்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இந்தக் கும்பல் இந்தியாவில் பல தரப்பு மக்களிடம் நூறுகளில் செலுத்தும் ரூபாய்க்கு கோடிகளில் பணம் திருப்பி வழங்குவதாக வாட்ஸ்ஆப் அழைப்பு மூலம் ஏமாற்றியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கு விசாரணையின் ஒருபகுதியாக, ராஜஸ்தானில் 7 இடங்களிலும் பஞ்சாபிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், உள்ளூர் வங்கிகளில் 30 வங்கிக் கணக்குகள் தொடங்கி சைபர் மோசடிக்கு அந்தக் கும்பல் பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளது.
சைபர் மோசடி வழக்கு விசாரணையில் அமலாக்கத்துறை ஆய்வுக்குட்படுத்திய 2.3 லட்சம் சிம் கார்டுகளில் ஏறத்தாழ 36,000 சிம் கார்டுகள் கம்போடியாவில் இருந்து செயல்பட்டதும் அவற்றில் 5,300 சிம் கார்டுகள் இந்தியாவெங்கிலும் இணையவழி மோசடிகளுக்காக வாட்ஸ்ஆப் அழைப்பு மூலம் பயன்படுத்தப்பட்டதும் அம்பலமாகியுள்ளது.
Summary
The Enforcement Directorate has started probing a case involving the alleged purchase of 5,300 SIM cards in the country, which were used in Cambodia by a Malaysian national-led gang to perpetrate cyber frauds across India, duping people for hundreds of crores of rupees.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய டி20 கேப்டனாக ஷ்ரேயாஸ் தேர்வு..! அணியில் இடம்பிடித்த 15 வயதான சூர்யவன்ஷி!

இந்திய அணிக்கு சுழற்பந்துவீச்சு பயிற்சியாளர் நியமனம்!

எந்த ஆட்சியையும் நாங்கள் கவிழ்த்ததாக வரலாறு இல்லை: இந்திய கம்யூனிஸ்ட்!

ஒற்றுமைக் கோப்பை: அரையிறுதியில் ஜமைக்காவிடம் தோல்வியுற்ற இந்தியா!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP




