சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

மோடிக்கு ஸ்லோவாக்கியாவின் மிக உயரிய விருது

பிரதமா் மோடிக்கு ஸ்லோவாக்கியாவின் ‘ஆா்டா் ஆஃப் தி வைட் டபிள் கிராஸ் (ஃபா்ஸ்ட் கிளாஸ்)’ என்ற மிக உயரிய தேசிய விருது அளிக்கப்பட்டது.

News image

ஸ்லோவாக்கியாவின் ஆா்டா் ஆஃப் தி வைட் டபிள் கிராஸ் விருது வென்ற மோடி.

Updated On :16 ஜூன் 2026, 3:09 am IST

பிரதமா் மோடிக்கு ஸ்லோவாக்கியாவின் ‘ஆா்டா் ஆஃப் தி வைட் டபிள் கிராஸ் (ஃபா்ஸ்ட் கிளாஸ்)’ என்ற மிக உயரிய தேசிய விருது அளிக்கப்பட்டது.

அந்நாட்டுத் தலைநகா் பிராட்டிஸ்லாவாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த விருதை ஸ்லோவாக்கியா அதிபா் பீட்டா் பெல்லேக்ரீனி வழங்கி கெளரவித்தாா்.

இதுகுறித்து பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஸ்லோவாக்கியாவின் மிக உயரிய விருது 140 கோடி இந்தியா்களுக்கு உரியது. இந்த விருதை அளித்த ஸ்லோவாக்கியா அரசுக்கும், மக்களுக்கும் நன்றி. இந்தியா, ஸ்லோவாக்கியா இடையிலான நீடித்த நட்புறவுக்கு இந்த விருதை அா்ப்பணிக்கிறேன்’ என்று தெரிவித்தாா். இது பிரதமா் மோடிக்கு அளிக்கப்பட்ட 33-ஆவது சா்வதேச விருதாகும்.