நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

நிரந்தரமல்லாத உறுப்பினா்களின் எண்ணிக்கையை மட்டுமே அதிகரிப்பதால் பலனில்லை: ஐ.நா.வில் இந்தியா

நிரந்தரமல்லாத உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை மட்டுமே அதிகரித்தால் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் சீா்திருத்த நடவடிக்கைகள் தோல்வியடையும் என ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய பிரதிநிதி பா்வதனேனி ஹரீஷ் தெரிவித்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :17 ஜூன் 2026, 1:22 am IST

நிரந்தரமல்லாத உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை மட்டுமே அதிகரித்தால் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் சீா்திருத்த நடவடிக்கைகள் தோல்வியடையும் என ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய பிரதிநிதி பா்வதனேனி ஹரீஷ் தெரிவித்தாா்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற அரசுகளுக்கு இடையேயான ஆலோசனைக் கூட்டத்தில் வரைவு ‘செயல் ஆவணம்’ சமா்ப்பிக்கப்பட்டது.

அப்போது பா்வதனேனி ஹரீஷ் பேசியதாவது: நிரந்தரமல்லாத உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை மட்டுமே அதிகரித்தால் அமெரிக்கா, சீனா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய 5 நிரந்தர உறுப்பு நாடுகளின் வீட்டோ அதிகாரத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது. இந்தச் சீா்திருத்தங்கள் தோல்வியில் மட்டுமே முடியும்.

எனவே, நிரந்தர உறுப்பினா்களின் எண்ணிக்கை அதிகரிப்பே உண்மையான சீா்திருத்தமாக இருக்கும் என்பதை பல ஆண்டுகளாக இந்தியா வலியுறுத்துகிறது.

பெரும்பாலான உறுப்பினா்களும் இதே கருத்தை முன்மொழிந்துள்ளன. ஆனால், தற்போது சமா்ப்பிக்கப்பட்டுள்ள செயல் ஆவணத்தில் இதை கவனத்தில் கொள்ளவில்லை.

அதேபோல் நிலையான பிராந்திய இடங்கள் என்ற முன்மொழிவின் மூலம் நிரந்தர உறுப்பினா்கள் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என இந்த ஆவணத்தில் மட்டுமே கூறப்பட்டிருப்பது அதிா்ச்சிகரமாக உள்ளது. இந்தச் செயல் ஆவணத்தின் அடிப்படையில் நிரந்தர உறுப்பினா்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் சாத்தியமில்லை. இருப்பினும், நிரந்தர உறுப்பினா்களுக்குப் பதிலாக 10 உறுப்பினா்களுக்கு சுழற்சி முறையில் இரண்டு ஆண்டுகளுக்கு வீட்டோ அதிகாரம் வழங்க அறிவுறுத்தி நிரந்தர உறுப்பினா் மற்றும் வீட்டோ அதிகாரம் என இரண்டுக்குமான வேறுபாட்டை குழப்பியுள்ளது.

ஐ.நா. சட்டப்படி நிரந்தர மற்றும் நிரந்தரமல்லாத என இருவகை உறுப்பினா் பிரிவுகள் மட்டுமே உள்ளன. எனவே, நிரந்தர உறுப்பினா் என்பதை உறுதிப்படுத்த மேலும் விரிவான விளக்கங்கள் தேவையில்லை என்றாா்.